Feb 21, 2010

எனது மடிக்கணினியில் உபுண்டு 9.10


நான் உபுண்டு 9.10 வெளியிடுவதற்கு முன்பே மடிக்கணினி வாங்கி விட்டேன்.அப்பொழுது என்னிடம் உபுண்டு 9.04 வட்டு தான் இருந்த்தது.ஏற்க்கனவே நான் பெடோரா, டெபியன், சபையான் போன்ற நிறுவல்களை மடிக்கணியில் நிறுவியிருப்பதால் வன்வட்டு தாங்காது என நினைத்து உபுண்டு 9.04 லினக்ஸினை Install Inside Windows என்ற முறையின் மூலம் நிறுவினேன்.

மிகவும்
நன்றாக இயங்கியது ஆனால் ஒலி வசதி (Sound Card) பிரச்சனை ஆனால் நான் அதை சரிசெய்ய முயற்ச்சிக்கவில்லை.காரணம் என்னுடைய மடிக்கணியில் WiFi நன்றாக உபுண்டு 9.04 ல் இயங்கியது.அதனால் உபுண்டு 9.10 ற்காக காத்திருந்தேன்.உபுண்டு 9.10 beta பதிப்பு வெளியிட்டவுடன் என் பல்கலைகழகத்தில் உள்ள இனைய தள அறையில் இருந்து உபுண்டு 9.10 யினை தரவிறக்கம் செய்து வந்து அந்த ISO கோப்பினை பூட்டபிள் வட்டாக மாற்றினேன் மாற்றிவிட்டு உபுண்டு 9.10 யினை live வட்டாக பயன்படுத்தி பார்த்தேன்.அப்பொழுது ஒரு அதிர்ச்சி எனக்கு காத்திருந்தது ,உபுண்டு 9.10 பூட்ட்டாகி மொழி தேர்வுக்காக காத்திருந்ததது அதில் ஆங்கிலம் என தேர்வு செய்து விட்டு,அடுத்து live விற்க்காக உபுண்டு 9.10 யினை தேர்வு செய்து Enter key அழுத்தினேன்.ஒரு சிறிய சுட்டியுடன் வந்து நின்று கொண்டு அதற்க்கு மேல் செல்லவில்லை,நானும் அதில் பலமுறை தோல்வியடைந்தேன்.ஒரு வழி யாக சமாதான மாகிக்கொண்டு உபுண்டு 9.10 முழு பதிப்பிற்காக அடுத்து காத்திருந்தேன்.

வெளியிட்டவுடன் உபுண்டு 9.10 ற்கு விண்ணப்பித்தேன்.விண்ணப்பித்து உபுண்டு 9.10 வட்டு கிடைத்தவுடன்,ஆசையுடன் கணினியில் லைவ் வட்டாக இயக்கி பார்த்தேன்.அப்பொழுதும் ஒரு சிறிய சுட்டியுடன் வந்து நின்றுக்கொண்டு அதற்க்கு மேல் செல்லவில்லை அத்துடன் நான் உபுண்டு 9.10 பயன்படுத்திப் பார்ப்பதை கைவிட்டேன் .

ஒரு நாள் எந்தர்த்தமாக உபுண்டு 9.04 ல் இருந்து Ubuntu Startup Disk Creater என்ற வசதி மூலம் என்னுடைய நண்பனின் Pendrive வினை வாங்கி உபுண்டு 9.10 வட்டினை உருவாக்கினேன் உருவாக்கிக்கொண்டு ,bios -ல் usb hard disk என்ற தேர்வின் மூலம் உபுண்டு 9.10 - ஐ live வட்டாக இயக்கினேன் என்ன ஆச்சரியம் உபுண்டு 9.10 மிகவும் விரைவாக பூட் ஆகி இயக்கத்திற்கு வந்தது.

ஒலி வசதியும் மிகவும் நன்றாக வேலை செய்தது.WiFi வசதி வேலை செய்ய வில்லை.Bluetooth வசதி நன்றாக வேலை செய்தது .

நன்றி: புகைப்படம் பிடித்து தந்த என்னுடைய நண்பர்கள் மின்னியல் & மின்னணுவியல் துறையைச் சேர்ந்த ரகுபதி மற்றும்உங்கள் அன்புச்செல்வன் .பாண்டியராஜன் அவர்களுக்கு.

No comments: