Dec 24, 2015

Open Source For You Magazine, Pay for 1, Get 2

What's common between Raspberry Pi, Arduino, Android, Linux, Mozilla, Firefox, Perl, PHP? They are all Open Source!

Open Source is HOT! It's growing both in the IT and Electronics space. And, Electronics For You's team happens to publish World's #1 magazine on Open Source too: Open Source For You.
THE OFFER: You can try out Open Source For You through our 'Buy 1, Get 1 Free' scheme. You can pay for only 3 issues, and get to read 6 issues of OSFY. For those who want to avail this deal for a longer team, you can book your copy up to 6 years. A table showing different option is published below.

You can make pay online at Click Here OR else send your DD/Cheque in the name of 'EFY Enterprises Pvt Ltd' to D-87/1, Okhla Industrial Area, Phase-1, New Delhi 110020.

This offer expires on 31st of December (Thursday), so please avail it as soon as possible.

PS:Kindly ignore this mailer, if you have alrady enroll your subscription under this offer.

Yours truly,

Rahul Chopra
Editorial Director | EFY Group | rahul.chopra@electronics-india.com | +91-98735 48909 |
 

Dec 18, 2015

கல்லூரி காலங்கள் - வெ.இறையன்பு


கல்லூரி காலங்கள் எனும் நிகழ்ச்சி பொதிகை தொலைக்காட்சியில் இரவு 10.30 மணிக்கு திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பப்படுகிறது. இந்நிகழச்சியை வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்கள் வழங்குகிறார்கள். நான் அலுவலகத்திலிருந்து வீட்டுக்குச் சென்றவுடன் இந்நிகழச்சியை தவறாமல் பார்ப்பேன். மிகவும் அருமையாக இருக்கும். அறிவுரையாக இல்லாமல் நண்பனோடு நண்பனாக தோளில் கைப்போட்டு பேசுவதுபோல் மிகவும் அழகாக கருத்துக்களை எடுத்துகூறுவார். அரைமணி நேரம் போவதே தெரியாது. இச்ச அதுக்குள்ள முடிந்துவிட்டதே என நினைக்கும் அளவுக்கு நிகழச்சி இருக்கும். கல்லூரி வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்ளலாம் என நினைப்பவர்களும், கல்லூரி வாழ்க்கையை வாழ்வின் முன்னேற்றுக்கு ஏணி படியாக அமைத்துக்கொள்வது எப்படி என நினைப்பவர்களும், அனைத்து கல்லூரி மாணவ மாணவிகளும், இளைஞர்களும் அவசியம் பார்க்கவேண்டிய நிகழ்ச்சி. இந்த தொடர் முழுவதும் பார்க்க முடிந்தால் நன்றாக இருக்குமே என நினைத்துக்கொண்டிருந்தேன். சரி யூடியுப் தளத்தில் தேடிப்பார்ப்போமே என நினைத்து தேடிப்பார்த்தேன். இதுவரை வந்த அனைத்து தொடர்களையும் பொதிகைத் தொலைக்காட்சி நிர்வாகத்தினர் யூடியுப் தளத்தில் பதிவேற்றியுள்ளனர். மிக்க மகிழச்சி அடைந்தேன். பொதிகை தொலைக்காட்சி நிர்வாகத்தினருக்கு ஆயிரமாயிரம் நன்றிகள். தரவிறக்கம் செய்ய இங்கு செல்லவும்.
நிகழ்ச்சியை நான் தரவிறக்கம் செய்த போது
இந்நிகழச்சி ஒளிபரப்பப்படுவதற்கு முன் அதைப்பற்றி வெ.இறையன்பு இ.ஆ.ப அவர்கள் கூறியது. "கல்லூரிப் பருவம் எவ்வளவு முக்கியமானது? இந்தப் பருவத்தில்தான் நாம கரியாகப் போகிறோமா? வைரமாகப் போகிறோமா? கூழாங்கல்லாகப் போகிறோமா? என்பது தீர்மானிக்கப்படுகிறது. இந்த டைம்ல நாம் எப்படி படிக்கிறோம்? எப்படி வாழ்க்கைய பார்க்கிறோம்? எப்படி கோரக்டரை வடிவமைச்சிக்கிறோம்? எப்படி நாம உலகத்தை அணுகிறோம்? எப்படி பண்புகளை வளர்த்துக்குறோம்? இதுதான் நம்மோட வெற்றிய தீர்மானிக்கப்போகிறது. இந்த பருவத்தைப் பொறுத்தவரைக்கும் இது ஒரு மகத்தான பருவம். சரியா கையாளுகிறவங்க பிற்காலத்துல மிகப்பெரிய தலைவர்களா, நிர்வாகிகளா மிகப்பெரிய வர்த்தகத்துல நிபுணர்களா, மிகப்பெரிய பேச்சாளர்களா, மிகப்பெரிய விஞ்ஞானிகளா வருவாங்க அதனால இந்த பருவத்துல முதல் நாள்ல இருந்து நம்மல நாம எப்படி வடிவமைச்சிக்கிறலாம்ங்கிறது குறிச்சு கொஞ்சம் பகிர்ந்துக்கிட்டம்னா உங்களுக்கு பயனுள்ளதா இருக்கும், நம்ம நாட்டுக்கும் பயனுள்ளதாக இருக்கும்."

Oct 23, 2015

Karbonn A12+ திறன்பேசியும் அதன் மின்கலமும்

என்னிடம் திறன்பேசி(Smartphone) இல்லை. சாதரண Samsung Guru E1200 மாடல் கைப்பேசியைத்தான் பயன்படுத்தி வருகிறேன். என் அம்மா, தம்பி, சித்தியெல்லாம் திறன்பேசி வாங்கிகொள்ளச் சொல்லி வற்புறுத்தினாலும் நான் வாங்கிக்கொள்ளவில்லை (என் சித்தி கொடுத்த பணத்தில்தான் இந்த சாம்சங் கைப்பேசியை வாங்கினேன்). அதற்கு இரண்டு காரணங்களைச் சொல்லலாம். ஒன்று, ரிச்சர்ட் ஸ்டால்மனின் உரைகளையும், எழுத்துக்களையும் கேட்டதன், படித்ததன் விளைவு. இன்னொன்று, நிசப்தம் வா.மணிகண்டன் அவர்களின் கட்டுரை மற்றும் செல்லாயுதம் பதிவு. நாமும் திறன்பேசி வாங்கினால் என்ன? என்ற ஆசை எனக்குள் தோன்றிய சமயத்தில்தான், வா.மணிகண்டன் அவர்களின் கட்டுரையும் வெளிவந்தது. அந்த கட்டுரை திறன்பேசி தேவையில்லை என்று நெத்திப்பொட்டில் அடித்தது போலச் சென்னது.

தற்போது நான் பயன்படுத்தும் அடிப்படை வசதிகள் மட்டும் கொண்ட samsung கைப்பேசி
முகநூல், டிவிட்டர், வாட்ஸ் அப் போன்றவைகளில் எனக்கு கணக்கு இல்லை. சமூகவலைதளங்கள் நம்முடைய நேரத்தை வீணடிப்பதோடு, நம்முடைய எழுத்துக்களையும், கருத்துக்களையும் சாக்கடைக்குள் எறிந்த கல்லாக மாற்றி விடுகிறது என்பது என்னுடைய கருத்து. ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் அளவிற்கு என்னுடைய தேவைகள் இல்லை. நான் கேமும் விளையாட மாட்டேன். எப்போதாவது சுடோகு விளையாடுவேன். அது நான் வைத்திருக்கும் சாம்சங் குரு போனிலேயே இருக்கிறது. மேற்கண்ட விஷயங்களுக்காகத்தான் திறன்பேசி அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது என்று நான் நினைக்கிறேன். இணையம் இல்லையென்றால் ஸ்மார்ட் வைத்திருப்பவர்கள் அதில் என்ன செய்வார்கள்? கேம்தான் விளையாடுவார்களா? என்றுகூட நான் நினைத்துப்பார்த்ததுண்டு. மேற்கண்ட எதையுமே நாம் செய்யவேண்டிய அவசியம் இல்லையெனும் போது, நமக்கு எதற்கு திறன்பேசியெல்லாம் என நினைத்து இன்று வரையிலும் திறன்பேசி வாங்கவேயில்லை.


என் அலுவலக நண்பர் ச.பிரபாகரன் அவர்கள் புதிதாக ஒரு திறன்பேசி வாங்கினார். அதனால் அவர் தான் ஏற்கனவே வைத்திருந்த பழைய Karbonn A12+ திறன்பேசியை, நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள் கதிர் என்றுச் சொல்லி என்னிடம் கொடுத்துவிட்டார். 3G இணைய இணைப்பிற்காக ஏதாவது Dongle வாங்கலாமா? என்ற யோசனையில் நான் இருந்த போது பிரபாகரன் அவர்கள் தன்னுடைய ஸ்மார்ட் போனை என்னிடம் கொடுத்தது Dongle வாங்கும் செலவையும் குறைத்தது. நண்பருக்கு நன்றி.

இணையத்திற்கென தனியாக ஒரு சிம் அட்டையை Nokia 6300 மாடல் கைப்பேசியில் போட்டு 2G இணைப்பாக பயன்படுத்தி வந்தேன். இணையத்தை இனிமேல் இந்த திறன்பேசி மூலமாகவே அணுக்கிக்கொள்வோமே, 3G வசதியுடனும் இருக்கிறது என நினைத்து, Nokia 6300 கைப்பேசியில் இருந்த சிம் அட்டையை பிடுங்கி பிரபாகரன் அவர்கள் கொடுத்த திறன்பேசியில் சொருகினேன்.

அலுவலக நண்பர்களெல்லாம் வாட்ஸ் அப்பில் ஒரு குழு உருவாக்கி அதில் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டு வந்தார்கள். கதிர் நீங்களும் வாட்ஸ் அப்புக்கு வாங்க, எனச் சொல்லி பிரபாகரன் அவர்கள்தான் வாட்ஸ் அப் செயலியை நிறுவிக்கொடுத்தார். நண்பர்கள் பகிரும் செய்தியை நான் படிப்பேனேயொழிய, இன்றுவரை அதில் ஒரு செய்தியைக்கூட நான் பகிர்ந்து கொண்டதே இல்லை. நண்பர்கள் வாட்ஸ் அப்பில் என்ன பகிரந்து கொண்டுள்ளார்கள்? எனப் பார்ப்போமே என்று எனக்கு எப்போதாவது தோன்றினால் அப்போது மட்டும் திறன்பேசியை ON செய்து வாட்ஸ் அப் செய்திகளைப் படிப்பேன். படித்துவிட்டு திறன்பேசியை OFF செய்து வைத்துவிடுவேன். இதுபோக விடுமுறை நாட்களில் அறையில் இருக்கும்போது 3G இணைய இணைப்பை பயன்படுத்துவேன் அவ்வளவுதான்.

இதுஒருபக்கம் இருக்க நண்பர் ச.பிரபாகரன் அவர்கள் கொடுத்த Korbonn A12+ திறன்பேசியின் மின்கலம்(Battery) கொஞ்சம் கொஞ்சமாக உப்ப ஆரம்பித்தது. கொஞ்ச நாட்களிலேயே மின்சாரத்தைச் சேமித்து வைக்கும் தன்மையை மின்கலம் முற்றிலுமாகவே இழந்தது. 5 நிமிடங்களுக்கு மேல் பயன்படுத்த முடியாது எனும் அளவிற்கு நிலையை எட்டியது. திறன்பேசியில் மாட்டவே முடியாதபடியும் உப்பிவிட்டது. ஆகையால் திறன்பேசியை தனியாகவும், மின்கலமை தனியாகவும் பிரித்தே வைத்திருந்தேன். கதிர் புதுசா ஒரு மின்கலம் வாங்கி மாட்டுங்க இல்லையென்றால் உப்பியிருக்கிற மின்கலம் வெடித்தாலும், வெடித்துவிடும் என நண்பர்கள் எச்சரித்து அறிவுறுத்தினார்கள். இது எனக்கு மேலும் பயத்தை உண்டுபண்ணியது. சரி புது மின்கலம் வாங்கிக்கொள்வோம் என நினைத்து, பழைய மின்கலத்தை தூக்கி குப்பைத்தொட்டியில் விசினேன்.



வீசும்போது எனக்குத் தெரியாது Karbonn A12+ திறன்பேசிக்கு மின்கலம் கிடைப்பது அவ்வளவு சுலபம் இல்லை என்று. அதன்பிறகு மின்கலம் வாங்கும் படலம் தொடங்கியது. சென்னையில் முகப்பேர்  கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இருக்கும் கடைகளில் நானும் எனது  கல்லூரிகால நண்பர் கார்த்தியும் ஒவ்வொரு கடையாகச் சென்று விசாரித்தோம் எந்த கடையிலும் கிடைக்கவில்லை. ஒருகடைக்காரர், சார் நானும் நீங்கதேடிக்கிட்டு இருக்கிற மின்கலத்தைத்தான் சார் தேடிக்கிட்டு இருக்கேன் இன்னும் கிடைக்கல சார், இந்த திறன்பேசிக்கு மின்கலம் தேடி அலையுறதுக்குப் பதிலா நீங்க புதிசா ஒரு திறன்பேசியையே வாங்கியிரலாம் சார் என கூறினார். முகப்பேர் கிழக்கில் ஒருக்கடைக்காரர் 350 ரூபாய் கொடுங்கசார் ஆர்டர் பண்ணி வாங்கிதர்றேன். ஆனால் ஒரிஜினல் மின்கலம் கிடைக்காது, டூப்ளிகேட்தான் சார் வரும் எனச்சொன்னார். கதிர் விலை அதிகமாக தெரிகிறது, வேறு எங்காவது தேடி வாங்கிக்கொள்வோம் வா எனச் சொல்லி கார்த்தி அழைத்து வந்துவிட்டான். அலைந்து திரிஞ்சப்பிறகு இவரிடமே ஆர்டர் கொடுத்துவிடுவுமோ என யோசித்தோம் அது வேறு கதை.

அலுவலக நண்பர்களிடம் நடந்ததைக் கூறினேன். நீங்க ரிச்சி ஸ் ரீட் போயிட்டு வாங்க கதிர் அங்கு நிச்சயம் மின்கலம் கிடைக்கும் என்று கூறினார்கள். எனக்கு ஞாயிறு மட்டும்தான் விடுமுறை ஆகையால் அங்கு செல்வதற்கெல்லாம் நேரம் கிடைக்காது. இதற்கு என்னதான் வழி என யோசித்துக்கொண்டேயிருந்தேன்.

இதற்கிடையில் அலுவலகத்தில் என்னுடன் பணிபுரியும் தம்பி வினோத்குமார், அவருடைய நண்பர் செல்போன் கடை வைத்திருப்பதாக கூறினார். அவரிடமும் விசாரித்தோம். அவரும் மின்கலம் கிடைக்கவில்லை என்று கூறிவிட்டார். கடல்லேயே இல்லையாம் எனும் வடிவேல் நகைச்சுவைத்தான் என் ஞாபகத்திற்கு வந்துபோனது.

இறுதியாக, இணையத்தில் தேடிப்பாரப்போமே என முடிவு செய்து இணையத்தில் தேடினோம். ebay, amazon, flipkart தளங்களில் Out of stock என வந்தது. ERD நிறுவனத்தின் தளத்தில் தேடினோம் அதிலும் Out of stock என வந்தது. Shopclues தளத்தில் மின்கலம் இருப்பதாகச் சொல்லி காண்பித்தார்கள், ஆர்டர் செய்தோம். எங்களிடம் நீங்கள் ஆர்டர் செய்த மின்கலம் இல்லை, 20 நாட்கள் டைம் கொடுங்கள், வேறு இடத்திலிருந்து வாங்கி அனுப்பி வைக்கிறோம் என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள். மின்கலம் வேண்டாம் எனக்கூறி அவர்களுக்கு பதில் அனுப்பி வைத்தேன். Phabletkart தளத்தில் ஆர்டர் செய்தோம் இதுவரையிலும் எந்த பதிலும் இல்லை. இந்நிலையில்தான், ERD தளத்தில் micromax Q50/Q34 மாடல் மின்கலம்கள் Karbonn A12+ க்கு பொருத்தமாக இருக்கும் என போட்டிருந்தார்கள். அதனால் micromax Q50/Q34 திறன்பேசிகளுக்கான மின்கலங்களைத் தேடினோம். அதையாவது வாங்கி மாட்டிவிடுவுமே எனும் ஆசைதான். ebay தளத்தில் சில micromax Q50/Q34 திறன்பேசிகளுக்கான மின்கலன்கள் கிடைத்தது. நேர், எதிர் மின்முனைகளில் மாற்றம் இருப்பதுபோலத் தோன்றுகிறது எனச் சொல்லி கடைசியில் அதையும் வாங்கவில்லை.

ஒரு போனுக்கு மின்கலம் வாங்குறது இவ்வளவு கஷ்டமான காரியமா? என நினைத்துக்கொண்டே, மின்கலம் இல்லாமல் செல்போனை பயன்படுத்த முடியாதா? என இணையத்தில் தேடிப்பார்த்தேன். instructable தளத்தில் ஒரு கட்டுரை இருந்தது. அதைப் படித்து நன்கு உள்வாங்கிக்கொண்டேன், தேடிபார்ப்போம் எதுவும் கிடைக்கவில்லையென்றால் இதுல சொல்லியிருக்கிறது மாதிரி செய்துவிட வேண்டியதுதான் என முடிவு செய்து விட்டு மின்கலம் தேடுவதை சில வாரங்களுக்கு ஒத்திவைத்தேன்.

அதன்பிறகு மறுபடியும் மின்கலத்தை தேடும் படலத்தைத் தொடங்கினேன். அப்பொழுது mAh என்றால் என்ன? என்பது பற்றி இணையத்தில் சில கட்டுரைகளைப் படித்தேன். அவ்வாறு படித்துக்கொண்டிருக்கும்போது, அந்த தளத்தில் சமமான voltage உடைய, அதிகமான mAh அளவுகொண்ட மின்கலத்தை திறன்பேசிக்கு பயன்படுத்தலாமா? என ஒருவர் கேள்வி கேட்டிருந்தார். பயன்படுத்தலாம் என பதில் கூறியிருந்தார்கள். இந்த பதில் எனக்கு கொஞ்சம் நம்பிக்கையைக் கொடுத்தது.

நண்பர் பிரபாகரன் கொடுத்த Karbonn A12+ திறன்பேசிக்கான மின்கலம் 3.7 voltage, 1400mAh அளவுள்ளது. ஒரு நாள் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது எனக்கு ஒரு ஐடியா தோன்றியது. என்னிடம் உதிரியாக Nokia 6300 மற்றும் Samsung போன்கள் இருந்தது. அந்த இரண்டு போன்களின் மின்கலம்களும் 3.7 voltage 800mAh அளவுள்ள மின்கலன்கள். அதாவது சம அளவுடைய voltage, குறைவான அளவு கொண்ட mAh. நாம ஏன் இந்த இரண்டு போன்களின் மின்கலன்களில் எதையாவது ஒன்றை இதற்கு பயன்படுத்திக்கொள்ளக் கூடாது என்று தோன்றியது? Karbonn A12+ மின்கலமும், என்னிடம் இருந்த இரண்டு மின்கலன்களும் 3.7 voltage கொண்டது. mAh தான் வேறுவேறு. மறுபடியும் ஒரு சந்தேகம் வந்தது 1400mAh மின்கலத்திற்கு பதிலாக 800mAh அளவுள்ள மின்கலத்தைப் பயன்படுத்தலாமா? என்று. இது தொடர்பாக இணையத்தில் தேடிப்பார்த்தேன். தாரளமாக பயன்படுத்தலாம் என பதில் கிடைத்தது.

இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், வெவ்வேறு அளவு voltage கள் கொண்ட மின்கலங்களை பயன்படுத்தக்கூடாது. 3.7 மின்கலத்திற்குப் பதிலாக அதைவிட அதிகமான voltage உடைய மின்கலங்களை பயன்படுத்தக்கூடாது. அப்படி மீறி பயன்படுத்தினால் திறன்பேசியின் mother board எரிந்துவிட வாய்ப்பிருக்கிறது.

இங்கு நான் ஒரு செய்தியை சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள். செல்போனின் மின்கலமில் இருக்கும் mAh என்பது, எவ்வளவு நேரத்திற்கு போனுக்கு மின்சாரத்தைக் கொடுக்கமுடியும் என்பதைக்குறிக்கிறது. ஒரு மணி நேரத்திற்கு 100mAh. உதாரணமாக 800mAh மின்கலம் என்றால் 8-மணி நேரமும், 1400mAh என்றால் 14 மணிநேரமும் தாக்கு பிடிக்கும். இதற்கு, தண்ணீர் தொட்டியை உதாரணமாக எடுத்துக்கொண்டீர்களேயானால் voltage, mAh இரண்டின் வித்தியாசம் புரியும். அதாவது, தண்ணீர் எவ்வளவு அழுத்தத்துடன் வெளியேறும் என்பது voltage, எத்தனை லிட்டர் தண்ணீரை தொட்டியால் சேமித்து வைக்க முடியும் என்பது mAh. அடுத்து பொதுவாக மின்கலம்யென்றாலே +(நேர்), -(எதிர்) என்று இரண்டு முனைகள்தான் இருக்கும். ஆனால் கைப்பேசி மற்றும் திறன்பேசிகளின் மின்கலன்களில் மூன்று முனைகள் இருக்கிறது. அது என்னவென்றால் ஒன்று நேர்மின்முனை, இரண்டாவது எதிர்மின்முனை, மூன்றாவதாக இருப்பது மின்கலத்தின் வெப்பத்தை தெரிந்துகொள்ள. அதாவது நடுவில் இருக்கும் முனை. வலது மற்றும் இடது புறமாக இருப்பது நேர், எதிர் முனைகள்.

சரி, Korbonn A12+ திறன்பேசிக்கு மாற்று வழியில் மின்கலம்யை எப்படி பொருத்துவது என கண்டுபிடிச்சாச்சு, அதற்கு போதுமான தகவல்களையும் திரட்டியாச்சு. அப்புறம் என்ன Operation ஐ ஆரம்பித்து விட வேண்டியதுதானே. எல்லா தகவல்களையும் திரட்டி வைத்துக்கொண்டு ஒருநாள் Operation ஐ ஆரம்பித்தேன்.

நான் வேலை பார்க்கும் நிறுவனம் Embedded அடிப்படையிலான நிறுவனம், ஆகையால் soldering iron, glue gun, wire cutter, multimeter, insulation tape, wire என அனைத்தும் அலுவலகத்தில் இருக்கும். எனக்கு சின்னவயசுலேயிருந்தே electrician வேலைகள் தெரியும்(விளம்பரம்: எங்க வீட்டிற்கான wiring வேலைகளை நான்தான் செய்தேனா பார்த்துக்கொள்ளுங்களேன்.), என்பதால் soldering செய்வது, multimeter ஐ வைத்து சோதித்துப் பார்ப்பது போன்ற அடிப்படை விஷயங்களில் ஓரளவிற்கு ஞானம் உண்டு. மின்கலம் Operation செய்ய இந்த திறமைகள் உதவி புரிந்தன.

முதலில் சாம்சங் மின்கலத்தைத் தான் பயன்படுத்திப் பார்த்தேன் வேலை செய்யவில்லை. அதற்கான காரணமும் தெரியவில்லை. விட்டுவிட்டேன். மனம் தளர்ந்துவிடாமல் Nokia வில் இருந்த ERD மின்கலம்யை பயன்படுத்திப் பார்த்தேன். கிடைத்தது வெற்றி!




இதுபோன்ற நிலைமை உங்களுக்கும் வந்தால், மேலே சொன்ன மாற்று வழிகளில் முயற்சிக்கலாம். தயவுசெய்து Electronics ஐ பற்றிய அடிப்படை தெரியாதவர்கள் இதை செய்து பார்க்க வேண்டாம். Electronics தெரிந்த உங்கள் நண்பர்களிடம் கொடுத்து செய்யச்சொல்லுங்கள். +, - இரண்டும் short ஆகும் பட்சத்தில் மின்கலம் வெடித்துவிடும். உயிருக்கு ஆபத்தும் ஏற்படலாம். கவனம் தேவை.

நீங்கள் ஏன் கைப்பேசியை பயன்படுத்துவதில்லை? எனும் கேள்விக்கு Richard Stallman அவர்கள் கூறிய பதில்
Because cell phones can track my location or my conversation with anyone. Most cellular phones, even if they are not smart phones, do have a processor running software and that (proprietary) software is malware, because it will send information about its users’ locations on remote command — and it has a back-door, so it can be remotely converted into a listening device. Almost all software has bugs — but this software is itself a bug. 

மேற்கோள்கள்:
http://opensourceforu.efytimes.com/2012/03/rms-interview-richard-stallman-freedom-android-amazon-facebook-steve-jobs/

Oct 17, 2015

லினக்ஸ் இல்லையென்றால் உலகமே இயங்காது


லினக்ஸ் கருனியினுடைய(kernel) 24-ஆவது பிறந்தநாளையொட்டி World Without Linux எனும் Animation தொடரை Linux foundation வெளியிட்டுள்ளது. இணையத்தை பயன்படுத்தாத ஆட்களே இல்லை எனச் சொல்லலாம், இணையம் இல்லையென்றால் உலகமே ஸ்தம்பித்து போய்விடும் என்கின்ற அளவிற்கு இணையம் என்பது நமது அன்றாட வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்துள்ளது. உலகின் 96% இணைய வழங்கிகளில்(web servers) லினக்ஸ் இயங்குதளம் இயங்கிக்கொண்டிருக்கிறது. இன்னும் எண்ணிலடங்கா கருவிகள் லினக்ஸை பயன்படுத்திக்கொண்டிருக்கின்றன. லினக்ஸ் இல்லையென்றால் இணையமே இல்லை. ஏன் உலகமே இல்லை என்றுகூடச் சொல்லலாம. இந்த தொடரின் முதல் பகுதி இணையத்தில் லினக்ஸின் பங்கு என்ன? என்பதைப் பற்றி கூறுவதாக உள்ளது. முதல் தொடரை  Amelia Lorenz அவர்கள் சிறப்பாக உருவாக்கியிருக்கிறார்கள். அடுத்தடுத்த தொடர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து வெளியிடப்படும். தொடரை கண்டுகளிக்க World Without Linux செல்லவும்.

இணைப்புகள்:

Oct 10, 2015

எளிய தமிழில் PHP

PHP பற்றி  நான் கணியம் இதழில் எழுதிய அனைத்து தொடர்களையும் இங்கு தொகுத்து கொடுத்துள்ளேன்.

அறிமுகம் - பகுதி - 0
பகுதி - 1
பகுதி - 2
பகுதி - 3
பகுதி - 4
பகுதி - 5
பகுதி - 6
பகுதி - 7
பகுதி - 8
பகுதி - 9
பகுதி - 10
பகுதி - 11
பகுதி - 12
பகுதி - 13
பகுதி - 14
பகுதி - 15
பகுதி - 16
பகுதி - 17
பகுதி - 18
பகுதி - 19
பகுதி - 20
பகுதி - 21
பகுதி - 22

நான் சென்னைக்கு வேலைதேடி வந்தபோது PHP Developer ஆக  வேலைக்குச் செல்லவேண்டும் எனும் முடிவில் HTML, CSS, JavaScript, Bootstrap, jQuery ஆகியவைகளைப் பற்றி  படித்துக்கொண்டிருந்தேன். இவைகளை படித்து முடித்துவிட்டு அதன்பிறகு PHP பற்றி படிக்கலாம் என நினைத்துக்கொண்டிருந்தேன். கணியம் இதழின் ஆசிரியர், சென்னை லினக்ஸ் பயனர் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீனிவாசன் அவர்களிடம் நான் வேலைக்குச் செல்வது தொடர்பான ஆலோசனைகளை கேட்பதற்காக. சென்னைக்கு வந்துள்ளது தொடர்பாகவும், PHP தொடர்பாக படித்துக்கொண்டிருப்பதையும் தெரிவித்தேன். அப்படியா மகிழ்ச்சி, அப்படியே PHP யைப் பற்றி கணியத்திற்கு கட்டுரைகள் எழுதிக்கொடுங்கள் என  கூறி 'PHP Essentials' என்ற PDF கோப்பை அனுப்பிவைத்தார். தினமும் காலை 11-மணியிலிருந்து இரவு 7-மணி வரை ஒருவாரத்திற்கு தீவிரமாக கட்டுரைகளை எழுதி கணியத்திற்கு அனுப்பி வைத்தேன். அடுத்த ஒரு சில வாரங்களில் எதிர்பாராத விதமாக நான் Python Developer ஆக பணியில் சேர்ந்துவிட்டதால் அதன்பிறகு மீதமிருந்த ஒருசில பகுதிகளை எழுதிமுடிக்கமுடியவில்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அனைத்து பகுதிகளையும் மொழிபெயர்த்து முடித்து கணியம் இதழிற்கு அனுப்பி வைத்துவிட்டேன். இப்பொழுது கணியம் இதழில் அனைத்து பகுதிகளும் வெளியிடப்பட்டுவிட்டது. PHP பற்றி கணியம் இதழில் எழுத வாய்ப்பளித்து, ஊக்கமளித்த ஸ்ரீனிவாசன் அவர்களுக்கும், கணியம் இதழுக்கும் என மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

Oct 3, 2015

இணையதளங்களில் இருக்கும் ஆங்கில வார்த்தைக்கான தமிழ் அர்த்தத்தை தெரிந்து கொள்வது எப்படி?

கூகுள் மொழிபெயர்ப்பு வசதியை அனைவரும் அறிந்திருப்பீர்கள். எனக்கு ஆங்கில வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாதபோதெல்லாம் கூகுளின் இந்த வசதியைத்தான் பயன்படுத்துவேன். அலுவலகத்தில் பணி நேரத்தில் நிறைய படிக்க வேண்டி இருக்கும். இணையத்திலேயே அவற்றையெல்லாம் படித்து விடுவேன். இன்றைக்கு இணையம்தான் எல்லாமே என்று ஆகிவிட்டது. கருவாடு வாங்குவதிலிருந்து, காயலாங்கடை பொருள் வரையிலும் அனைத்தும் இணையத்திலேயே கிடைத்து விடுகிறது.

இணையத்தில் படிக்கும் படிக்கும் போது ஆங்கில வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாத போது அந்த வார்த்தையை பிரதியெடுத்து, https://translate.google.com/ தளத்தினுள் ஒட்டி அர்த்தம் தெரிந்து கொள்வதுதான் என்னுடைய பழக்கமாக இருந்து வந்தது. இது எனக்கு கொஞ்சம் அசௌகரியமாகப்பட்டது. அதனால் நான் அதிகமாக விரும்பி பயன்படுத்தும் நெருப்புநரி உலாவியில்(Mozilla Firefox Browser) இதற்கென ஏதாவது addons இருக்கிறதா எனத்தேடிப் பார்த்தேன். addons இருந்தது.

இந்த addons ஐ நிறுவிக்கொள்வதினால் என்ன நன்மையென்றால், நாம் உலாவியில் இணையதளங்களை படித்துக்கொண்டிருக்கும் போது, ஏதாவது ஒரு வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லையெனில் அந்த வார்த்தையையோ அல்லது வரியையோ தேர்வு செய்து வலது சொடுக்கி(Right Click) 'Translate selection with Google Translate' என்பதைச்சொடுக்கினால் நேரடியாகவே அந்த வாரத்தைக்கான தமிழ் அர்த்தத்தை கொடுத்து விடுகிறது. பார்க்க படங்கள் 1 மற்றும் 2.

படம் - 1
படம் - 2

நிறுவும் முறை:

https://addons.mozilla.org/en-US/firefox/addon/google-translator-for-firefox/?src=ss முகவரிக்குச் செல்லுங்கள் Add to firefox எனும் பொத்தானை சொடுக்குங்கள். Restart Firefox கேட்டால் அதை அனுமதியுங்கள்.

படம் - 3
கூகுள் நிறைய மொழிகளுக்கு இந்த வசதியை அளித்திருப்பதால், எந்த மொழியிலிருந்து எந்த மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்யவேண்டும் என்பதை சொல்ல வேண்டும். அதற்கு Firefox உலாவியின் வலது மேல் மூலையில் 'T' எனும் குறியீட்டுடன் இருக்கும் 'Google Translate addon' உடன் இருக்கும் கீழ்நோக்கியிருக்கும் முக்கோணகுறியீட்டை செடுக்கி 'Options' என்பதை சொடுக்குங்கள்.

அதில் 'Language of translation' என்பதில் Tamil(தமிழ்) என்பதையும், 'Always the selected text' என்பதையும் தேர்வு செய்யுங்கள். படம் - 3 ஐ பார்க்கவும்.

அவ்வளவுதான் இனிமேல் நீங்கள் இணையத்தில் ஏதாவது ஆங்கில தளங்களை பார்த்து அல்லது படித்துக்கொண்டிருக்கும்போது அதிலிருக்கும் ஏதாவது ஒரு வாரத்தைக்கு அர்த்தம் தெரியவில்லையெனில் வார்த்தையை தேர்வு செய்து, வலது சொடுக்கி(Right Click) 'Translate selection with Google Translate' என்பதை கொடுங்கள். உங்களுக்கு அந்த வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் கிடைக்கும்.

Sep 6, 2015

கணினி மற்றும் லினக்ஸ் மீது எனது காதல் - 1

குறிப்பு: இது முழுக்க முழுக்க என்னோட சொந்த கதை. என்னோட வாழ்க்கையின் பயணத்தை பதிவு செய்து விட வேண்டும் எனும் ஆவலில் எழுதப்பட்டது.

நான் லினக்ஸை நோக்கி வந்தது எப்படி? என்பதைப் பற்றி ஒரு பதிவை எழுதிவிட வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசை இருந்துவந்தது. அதற்கான தருணம் இப்பொழுதுதான் வாய்த்திருக்கிறது. நான் பின்னவாசல் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து முடித்த பின் பதினொன்று, பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கவில்லை. ஐ.டி.ஐ யில் எலக்ட்ரீசியன் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். எங்க தாத்தாதான் என்னை ஐ.டி.ஐ படிக்க வைக்க வேண்டும் என ஆசைப்பட்டார். நான் பொறியியல் வரையிலும் படிப்பதற்கும், இப்பொழுது எம்.பி.ஏ படித்து முடித்து இருப்பதற்கும் அவர்தான் காரணம்.

எங்கள் குடும்பத்திற்கு எல்லா காலங்களிலும் மிகவும் உறுதுணையாக இருந்துவரும் கிருஷ்ணன் அவர்களின் கடைசி பையன் ரமேஷ் அவர்கள் அறந்தாங்கி அரசு பல்தொழில்நுட்ப கல்லூரியில்(பாலிடெக்னிக்) E.C.E டிப்ளமோ படித்துமுடித்து விட்டு அறந்தாங்கியில் இருக்கும் பாரி சர்க்கரை ஆலையில் பணிபுரிந்து வந்தார். என் அப்பாவிடம் அவர்தான் கதிரை ஐ.டி.ஐ படிக்க வைப்பதைவிட டிப்ளமோ படிக்கவைக்கலாம் என ஆலோசனை கூறினார். அவரே பாலிடெக்னிக் சேர்வதற்கான விண்ணப்ப படிவத்தையும், ஐ.டி.ஐ (அரசினர் தொழிற்பயிற்சி மையம், புதுக்கோட்டை) யில் சேர்வதற்கான விண்ணப்ப படிவத்தையும் வாங்கி வந்து அவர்கைப்படவே பூர்த்தி செய்து கொடுத்தார். பாலிடெக்னிக், ஐ.டி.ஐ இரண்டிலும் சேர்வதற்கான அழைப்புக்கடிதம் வந்தது. ஐ.டி.ஐ படிக்க வேண்டாம் பாலிடெக்னிக்கில் டிப்ளமோ படிக்கலாம் என முடிவு செய்து, என் அப்பா அறந்தாங்கி அரசு பல்தொழில்நுட்ப கல்லூரியில் சேர்த்து விட்டார்.

எலக்ட்ரீசியன் வேலையின் மீது இருந்த ஆர்வத்தால் பாலிடெக்னிக்கில் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை கிடைக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். நான் பத்தாம் வகுப்பில் பெற்றிருந்த மதிப்பெண் காரணமாக E.C.E கிடைக்கவில்லை. கணினி அறிவியல் துறையைத் தவிர மற்ற துறையில் உள்ள இடங்கள் அனைத்தும் காலியாகிவிட்டது. அதனால் கணினி அறிவியல் துறையைத் தேர்ந்தெடுத்தேன். டிப்ளமோவில் முதல்வருடத்தில் 11-தாள்கள் இருந்ததால் படிக்க மிகவும் சிரமமாக இருந்தது. முதல்வருட படிப்பில் துறைரீதியான தாள்கள் எதுவும் இல்லை. ஆகையால் ஏதோ வெறுமையாக இருந்தது. இரண்டாம் ஆண்டிலிருந்துதான் எனக்கு கணினி அறிவியில் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது. முதல்வருடத்தில் பதினொறு தாள்களிலும் நான் தேர்ச்சி பெற்றிருந்தேன். இந்த வெற்றி எனக்கு அதிகமான தன்னம்பிக்கையை கொடுத்தது. இரண்டாம் ஆண்டின் முதல்நாள் கணினி அறிவியல் துறையின் துறைத்தலைவர் ரவிக்குமார் அவர்கள் எங்களிடம் அறிமுக உரையாற்றினார். அந்த உரை எனக்கு மேலும் கணினி அறிவியல் துறையின் மீது அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியது.

என்னோட சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகேயுள்ள சித்தாதிக்காடு கிராமம், எங்க ஊரிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் மணக்காடு ஊர் உள்ளது. சுரேஷ் அண்ணன் மணக்காட்டிலிருந்து சொரண்க்காடு வந்து அறந்தாங்கியில் இருக்கும் எங்கள் கல்லூரிக்கு வருவார். நான் இரண்டாமாண்டு படித்தபோது அவர் மூண்றாமாண்டு படித்துக்கொண்டிருந்தார். நானும் அவரும் ஒரே பேருந்தில்தான் கல்லூரிக்கு வருவோம், கல்லூரி விட்டுச் செல்வோம். பேருந்தில்தான் அவர் எனக்கு அறிமுகமானார்.

கம்யூட்டரைப் பற்றி நன்கு தெரிந்து கொள்வது எப்படி அண்ணே? என்று நான் அவரிடம் கேட்டபோது, அதற்கு அவர் 'தமிழ் கம்ப்யூட்டர்' என்று ஒரு இதழ் மாதமிருமுறை வருகிறது. அதை தவறாமல் வாங்கிப்படி. அதுபோதும் உனக்கு. அந்த இதழ் மூலமாக நீ நிறைய தெரிந்துகொள்ளலாம், என்று கூறினார்.

எனது கல்லூரி வாழ்க்கையில் திருப்புமுனையை 'தமிழ் கம்ப்யூட்டர்' இதழ்தான் எற்படுத்தியது. அதன்பிறகு அந்த இதழை தவறாமல் வாங்கிப்படித்தேன். ஐந்து ஆண்டுகள் சந்தாதார்ராகவும் இருந்து வந்தேன். அறந்தாங்கி பேருந்து நிலையத்திலேயே அந்த இதழ் கிடைத்ததால், தவறாமல் வாங்கி படித்தேன். இரண்டாமாண்டு முடிந்து மூன்றாமாண்டு வந்தது, மூன்றாமாண்டின் இறுதிப்பருவத்தில் Elective தாள் படிக்க வேண்டும். மூன்றுதாள்கள் கொடுப்பார்கள் அதில் ஒன்றை தேர்வு செய்யவேண்டும். அந்த மூன்று தாள்களில் 'Linux Installation and Administration' என்ற ஒருதாள் இருந்தது. எங்கள் துறைத்தலைவர் ரவிக்குமார் சார் அவர்கள் லினக்ஸை Elective ஆக தேர்வு செய்தார்.

இங்குதான் என்னோட லினக்ஸ் வாழ்க்கை ஆரம்பமானது. லினக்ஸைப் பற்றி எங்கள் துறைத்தலைவரைத்தவிர வேறு யாருக்கும் தெரியாது என்பதால், அவரே லினக்ஸ் பற்றி நடத்தினார். எங்கள் துறைத்தலைவர் ரவிக்குமார் சார் எதைப்பற்றி நடத்தினாலும் மிகவும் ஆழமாகவும், தெளிவாகவும்தான் நடத்துவார். எனக்கு கணினியில் நல்ல அடித்தளத்தை அமைத்துதந்தது துறைத்தலைவர் ரவிக்குமார் சார்தான். லினக்ஸைப் பற்றி மிகவும் விரிவாகவே நடத்தினார். லினக்ஸிற்கு ஆய்வகத்தாள்(Lab) ஒருபாடமாக இருந்தது. அது லினக்ஸைப் பற்றி நன்கு அறிந்துகொள்ளவதற்கு ஏதுவாக அமைந்தது.

ஒவ்வொரு மாணவரும் ஆய்வகத்தில் லினக்ஸை நிறுவிதெரிந்துக்கொள்ள முழு சுதந்திரம் கொடுத்தார் எங்கள் துறைத்தலைவர். நான் முதன்முதலாக நிறுவிப்பார்த்த லினக்ஸ் Redhat, விண்டோஸ் எக்ஸ்பி உச்சத்தில் இருந்தகாலம். விண்டோஸ் எக்ஸ்பியிலேயே இரண்டு ஆண்டுகள் பழிகிய எங்களுக்கு Redhat இன் தோற்றம் பிரமிப்பாக இருந்தது.

அந்த நேரத்தில் தமிழ்கம்யூட்டர் இதழில் லினக்ஸைப் பற்றிய ஒரு தொடர் வெளிவந்து கொண்டிருந்தது. லினக்ஸில் விண்டோஸின் பார்ட்டிசியன்களை அணுகுவது கொஞ்சம் சிரமமானது என எங்கள் துறைத்தலைவர் கூறியிருந்தார். தமிழ்கம்ப்யூட்டர் இதழில் 'விண்டோஸ் பார்ட்டிசியன்களை லினக்ஸில் திறப்பது எப்படி?' என்ற ஒரு கட்டுரை வந்தது. அதில் சொல்லப்பட்டிருந்ததை ஆய்வகத்திற்குச் சென்று நானும் என்னுடையை நண்பர் ஆலங்குடி தினேஷும் செய்துபாரத்தோம்.

விண்டோஸ் பார்ட்டிசியின் லினக்ஸில் தெரிந்தது. எங்களுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. அதை நானும் எனது நண்பனும துறைத்தலைவர் ரவிக்குமாரிடம் சென்று கூறினோம். எங்களை பாராட்டினார் துறைத்தலைவர். இது மேலும் லினக்ஸ் மீது ஆர்வத்தை தூண்டியது.

==தொடரும்==

Aug 6, 2015

உங்களது மின்னஞ்சல் கண்காணிக்கப்படுகிறது

அமெரிக்காவின் NSA திட்டத்தைப் பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். கூகுள் போன்ற பெரும் நிறுவனங்கள் அமெரிக்காவின் CIA போன்ற உளவு அமைப்புகளுக்கோ அல்லது வேறு நாட்டின் உளவு அமைப்புகள் கேட்டுக்கொண்டாலோ தங்களுடைய மின்னஞ்சல் சேவைகளைப் பயன்படுத்தும் பயனர்களின் விவரங்கள் அனைத்தையும் கொடுத்துவிடுகிறார்கள்.  Edward Snowden இன் கைது விபரங்களைப் தேடிப்பார்தாலே உங்களுக்கு பல பூதாகரமாக தகவல்கள் கிடைக்கும்.


இது பற்றி இன்னும் அதிகமான விபரங்களை தெரிந்துகொள்ள வேண்டுமா? கீழ்காணும் கட்டுரைகளைப் படித்துப் பாருங்கள்


நாம் அனுப்பும் மின்னஞ்சல்கள் பாதுகாப்பானவைகள் அல்ல. யார் வேண்டுமானாலும் நாம் அனுப்பும் மின்னஞ்சல்களை திறந்து படித்து விட முடியும். குறிப்பாக NSA போன்ற Bulk Surveillance திட்டத்தின் கண்காணிப்புகளிலிருந்து தப்பிக்க முடியாது. இதைப்பற்றி எழுதியதினாலேயே கூட இந்த பதிவு என்னுடைய வலைப்பூவிலிருந்து என்னை கேட்காமலேயே நீக்கப்படலாம்!

அப்படியொன்றும் இரகசியமான தகவல்களெல்லாம் என்னோட மின்னஞ்சலில் இல்லையென்று நீங்கள் கூறலாம். அப்படியே வைத்துக்கொள்வோமே உங்களுடைய Privacy உங்களுக்கு முக்கியமில்லையா?

இந்த கண்காணிப்பிலிருந்து தப்பிக்க என்ன வழி? விபரங்கள் கீழே உள்ளன படித்துப்பார்த்து தெளிவு பெறுங்கள்.



பின்குறிப்பு: தம்பி இவ்வளவு வக்கனையா பேசுறீயே உன்னோட இந்த வலைப்பூவே கூகுளோடதுதான் தெரியுமா? அப்புறம் நீ மட்டும் ஏன் கூகுளோட சேவைகளை பயன்படுத்துறேன்னு நீங்க கேட்கிறது எனக்கு புரியுது

Aug 3, 2015

Windows 7 நிறுவும் போது கிடைத்த பிழைச்செய்தியும், அதற்கான தீர்வுகளும்

எனது நண்பர் ராஜாசிங்கும், தம்பி வினோத்தும் தங்களது கணினியில் விண்டோஸ் 7 -ஐயும், உபுண்டுவையும் இரட்டை நிறுவுதலாக நிறுவித்ததரச் சொன்னார்கள். இரண்டு பேருடைய கணினியிலும் உபுண்டுவை நிறுவும் போது எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. விண்டோஸ் 7 நிறுவும் போதுதான் தலா இருவரினுடைய கணினியிலும் பிரச்சனை வந்தது.

விண்டோஸ்னாவே பிரச்சனைதானே, பிரச்சனைக்காகவே கண்டிபிடிக்கப்பட்டதுதானே அது!

நண்பர் ராஜாசிங்கின் கணினியில் விண்டோஸ் 7 நிறுவும்போது ஏற்பட்ட பிரச்சனை 

நண்பர் ராஜாசிங்கினுடையது Lenovo Ideapad z580 மாடல் மடிக்கணினி. ஏற்கனவே அதில் விண்டோஸ் 8 பதிப்பு நிறுவப்பட்டிருந்தது. அதை நீக்கிவிட்டு விண்டோஸ் 7 + உபுண்டு 14.04 நிறுவித்தரச் சொன்னார். UEFI Enabled செய்யப்பட்டிருந்தது. UEFI Enabled செய்யப்பட்டிருக்கும் மடிக்கணினியில் வேறு எந்த இயங்குதளத்தையும் நிறுவமுடியாது. லைவ் மோடில் உபுண்டுவை பரிசோதித்துப் பார்க்க வேண்டுமென்றால்கூட UEFI ஐ Disable செய்துவிட்டுத்தான் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். எனவே முதலில் BIOS -க்குச் சென்று UEFI ஐ Disable செய்துவிட்டு உபுண்டுவை லைவ் மோடில் இயக்கி Gpartition Manager கருவி மூலமாக 1TB வன்வட்டை Partition செய்து முடித்தேன். முதலில் விண்டோஸை 7 நிறுவிவிட்டு பிறகு உபுண்டுவை நிறுவுவோம் என முடிவு செய்து விண்டோஸை 7 ஐ Pendrive இல் Bootable ஆக மாற்றிக்கொண்டு நிறுவுதலை ஆரம்பித்தேன். Install Now என்பதை கொடுத்த பிறகு ஒரு பிழைச்செய்தி காண்பித்தது. அந்த பிழைச்செய்தி இதுதான், "No device drivers were found. Make sure the installation media contain the correct drivers, and then click OK." 




விண்டோஸ் 7 இதை ஒரு பெரிய பிழைச்செய்தியாக காண்பித்துக்கொண்டிருந்தது. இந்த பிழைச்செய்திக்கு காரணம் USB 3.0 -க்கான drivers windows 7 இல் இல்லை அதுதான். ராஜாசிங்கின் மடிக்கணினியில் இடதுபுறமாக இருந்த இரண்டு USB port களும் USB 3.0 வகையைச் சேர்ந்தது. வலதுபுறமாக இருந்த ஒரே ஒரு USB port, USB 2.0 வகையைச் சேர்ந்தது. ஆகையால் இடதுபுறமாக உள்ள USB 3.0 port இல் சொருகியிருந்த pendrive ஐ பிடுங்கி, வலதுபுறமாக உள்ள USB 2.0 port  இல் சொருகிவிட்டு விண்டோஸ் 7 நிறுவுதலை தொடங்கினேன். ஏற்கனவே காண்பித்த பிழைச்செய்தியும் காண்பிக்கப்படவில்லை, நிறுவுதலும் சுமூகமாக முடிந்தது. நீங்களும் இதுபோன்ற பிழைச்செய்திகளை விண்டோஸ் 7 நிறுவும் போது எதிர்கொண்டால் இந்த வழிமுறையையும் ஒருமுறை செய்துபார்த்துவிடுங்கள். தீர்வு கிடைக்கலாம்.

தம்பி வினோத்தின் கணினியில் விண்டோஸ் 7 நிறுவும் போது ஏற்பட்ட பிரச்சனை 

தம்பி வினோத் அவருடைய 1TB வன்வட்டினை முறையாக partition செய்து அதில் விண்டோஸ் 7 ஐயும், உபுண்டுவையும் நிறுவித்தரச்சொன்னார். உபுண்டுவைக் கொண்டு வன்வட்டினை partition -னெல்லாம் செய்து முடித்தபிறகு நிறுவுதலை தொடங்கினோம். வீட்டிலிருந்து வன்வட்டினை மட்டும் தனியாக கழட்டி எடுத்துக்கொண்டு வந்திருந்தார். அதை மற்றொரு கணினியில் இணைத்து விண்டோஸ் 7 நிறுவுதலை தொடங்கினோம். partitions ஐ list out செய்யும் இடத்தில் பிழைச்செய்தி வந்தது. என்னென்னவெல்லாமோ செய்துபார்த்தோம் சரிசெய்ய முடியவில்லை. இறுதியில் இணையத்தை துழாவ ஆரம்பித்தோம். தீர்வு கிடைத்தது.

பிரச்சனை என்னவென்றால் விண்டோஸ் 7 ஐ நிறுவும் போது கணினியின் mother board -இல் ஒரே ஒரு வன்வட்டு மட்டுமே இணைக்கப்பட்டிருக்க வேண்டுமாம். தம்பி வினோத் வீட்டிலிருந்து வன்வட்டினை கழட்டி எடுத்து வந்திருந்ததினால், அதை இன்னொரு கணினியில் இணைத்தோமல்லவா அந்த கணினியில் ஏற்கனவே ஒரு வன்வட்டு இருந்தது. தம்பியோடதையும் கூடுதலாக இணைத்து விட்டதால் இரண்டு வன்வட்டு motherboard -இல் இணைக்கப்பட்டிருந்தது. அதனால் பிழை. அப்புறமாக ஏற்கனவே கணினியில் இணைக்கப்பட்டிருந்த வன்வட்டினை நீக்கிவிட்டு. தம்பியோட வன்வட்டினை மட்டும் இணைத்து விண்டோஸை 7 நிறுவியபோது, நிறுவுதல் சுமூகமாக முடிந்தது. இதையும் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள் உங்களுக்கு இதுபோன்ற சூழல் ஏற்பட்டால். இந்த வழிமுறையை கடைபிடித்துப் பாருங்கள்.

Jun 19, 2015

உபுண்டு லினக்ஸ் இயங்குதளத்தை நிறுவுவதற்கு முன், MD5SUM ஐ சரிபார்த்துக்கொள்ளுங்கள்

உபுண்டு இயங்குதளத்தை நிறுவுவதற்கு முன், இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்த ISO கோப்பினை துல்லியமாக தரவிறக்கம் ஆகியிருக்கிறதா என ஒருமுறை சோதித்துப் பார்த்துக்கொள்வது வேண்டும்.

ஏன் ISO கோப்பினை சரிபார்க்க வேண்டும்?
ஒருவேளை ISO கோப்பு சரியாக தரவிறக்கம் ஆகாமல்  சிதிலமடைந்திருந்தால் உபுண்டு இயங்குதளத்தை நிறுவிய பின் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதில் முதல் பிரச்சினை என்னவென்றால், உபுண்டுவை நிறுவிய பின் பயனர் பெயரையும் அதற்கான கடவுச்சொல்லையும் நீங்கள் சரியாக உள்ளீடு செய்தாலும், உபுண்டு இயங்குதளத்திற்குள் செல்லாமல் பயனர் பெயரும், கடவுச்சொல்லும் தவறு என சொல்லிக்கொண்டே இருக்கும். இதுபோன்ற பிழையை நானும் ஒரு முறை  சந்தித்து இருக்கிறேன். ஆகையால் இந்த பதிவில் உபுண்டு இயங்குதளத்தின் ISO கோப்பினை தரவிறக்கம் செய்த பின், அது சரியாக தரவிறக்கம் தரவிறக்கம் ஆகியிருக்கிறதா? இல்லையா? என்பதை எப்படி கண்டுபிடிப்பது? என்று பார்க்க போகிறோம். ஏற்கவே உபுண்டுவைப் பயன்படுத்திக்கொண்டுருப்பவர்கள் இந்த பதிவை படித்துக்கொள்ளவும்.
இந்த கட்டுரையில் சொல்லப்படும் வழிமுறைகள் முதன்முறையாக உபுண்டு இயங்குதளத்தை நிறுவ இருப்பவர்களுக்கானது. அதாவது விண்டோஸின் தொல்லைகளிலிருந்து விடுபட வேண்டும் என நினைத்து, உபுண்டுவை பயன்படுத்த வேண்டும் எனும் தீராத ஆர்வத்தால் விண்டோஸ் இயங்குதளம் இருக்கும் கணினியில் உபுண்டுவை நிறுவ நினைப்பவர்களுக்கானது.

எப்படி ISO கோப்பினை சரிபார்ப்பது? வழிமுறைகள் என்ன?
லினக்ஸ் இயங்குதளமாக இருந்தால் md5sum எனும் கட்டளையைக் கொண்டு ISO கோப்பின் md5sum எண்ணினை எளிமையாக கண்டுபிடித்து விடலாம். ஆனால் விண்டோஸைப் பொறுத்தமட்டிலே நாம்தான் அதற்கான மென்பொருளை நிறுவி அதன்பிறகு md5sum ஐக் கண்டுபிடிக்க வேண்டும்.

முதன்முறையாக உபுண்டுவை நிறுவ நினைப்பவர்கள் அவர்கள் ஏற்கனவே பயன்படுத்திக்கொண்டிருக்கும் விண்டோஸ் இயங்குதளத்திலிருந்துதான் உபுண்டு லினக்ஸையே தரவிறக்கம் செய்தாக வேண்டும். ஆகையால் md5sum எண்ணினை கண்டுபிடிக்க வேண்டுமென்றாலும் விண்டோஸைப் இயங்குதளத்தைப் பயன்படுத்தித்தான் கண்டுபிடிக்க வேண்டும். ஆகையால் இந்த வழிமுறைகள் அனைத்தும் விண்டோஸிற்கானது.

சரி வழிமுறைகள் என்னவென்று பார்ப்போமா?
இந்த தளத்திற்குச் சென்று winMd5Sum செயலியை தரவிறக்கம் செய்யவும். winMd5Sum செயலியை விண்டோஸ் இருக்கும் கணினியில் நிறுவவும். winMd5Sum செயலியை திறக்கவும்.

File Name என்பதில் தரவிறக்கம் செய்த உபுண்டுவின் ISO கோப்பினை தேர்வு செய்து Open கொடுக்கவும்.சிறிது நேரம் காத்திருக்கவும். winMd5Sum செயலி MD5SUM ஐக் கணக்கிட்டு MD5 Sum எனும் பகுதிக்குள் காட்டும்.

இப்பொழுது நாம் தரவிறக்கம் செய்த கோப்பின் MD5SUM எண்ணை கண்டுபிடித்துவிட்டோம். இதை உபுண்டுவின் இயங்குதளத்தில் இருக்கும் எண்ணுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டுமல்லவா? அதற்காக UbuntuHashes தளத்திற்கு செல்லவும். நீங்கள் தரவிறக்கம் செய்த உபுண்டுவின் பதிப்பிற்கான md5 Hash -னைக் copy செய்து, winMd5Sum செயலியின் Compare எனும் பகுதியில் paste செய்யவும். Compare எனும் button ஐ அழுத்தவும்.கோப்பு சரியாக தரவிறக்கம் ஆகியிருந்தால் 'MD5 Check Sums are the same' எனும் செய்தி கிடைக்கும்.
அப்படியென்றால் உபுண்டு துல்லியமாக தரவிறக்கம் ஆகியிருக்கிறது என்று அர்த்தம். 'MD5 Check Sums are different' எனும் செய்தி கிடைத்தால். துல்லியமாக தரவிறக்கம் ஆகவில்லை, பிழைகளோடு கோப்பு இருக்கிறது என்று அர்த்தம். துல்லியமாக தரவிறக்கம் ஆகியிருந்தால் நீங்கள் உபுண்டுவை நிறுவும் வேலையை ஆரம்பிக்கலாம். துல்லியமாக தரவிறக்கம் ஆகவில்லையென்றால் நீங்கள் மறுபடியும் உபுண்டுவை முதலிலிருந்து தரவிறக்கம் செய்ய ஆரம்பிக்க வேண்டும்.

நன்றி:
இந்த பதிவில் போடப்பட்டிருக்கும் படங்கள் அனைத்தும் நண்பர் எம்.கிருஷ்ணன் அவர்களின் மடிக்கணினியிலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி கிருஷ்ணன்.

இந்த பதிவை எழுதியதற்கு தூண்டுகோலாக இருந்த கவிஞர்.தணிகை அவர்களுக்கும், என்னையும் எனது தளத்தினையும் கவிஞர் தணிகை அவர்களிடம் அறிமுகம் செய்து வைத்த நண்பர் செல்வகுமார் அவர்களுக்கும் நன்றி.
உதவிய தளங்கள்:

Jun 8, 2015

மொழி என்பது அறிவல்ல!

07.06.2015 ஞாயிறு, தினகரன் இதழில், வசந்தம் இணைப்பில் எழுத்தாளர் யுவகிருஷ்ணா எழுதியுள்ள கட்டுரை




நன்றி: தினகரன் (07.06.2015 வசந்தம் இணைப்பு)

Apr 15, 2015

இனிமேல்....ஈஸியாக, வாட்ஸ் அப்பில்... போட்டோ அனுப்ப முடியாது! யூ- டியூபில் படம் பார்க்க முடியாது. ஸ்கைபில் பேச முடியாது - வலைநொதுமை – NetNeutrality – சிறுகதை


நேத்திபுரம் பேருந்து நிறுத்தம் ஒன்றும் சொல்லிக்கொள்ளும் படியானதோ முக்கியமானப் பேருந்து நிறுத்தமோ அல்ல. இந்தியப் பேருந்து நிறுத்தங்களுக்கே உரியதான தூசியும் தும்புமான ஒன்றுதான் இதுவும். இந்தப் பேருந்து நிறுத்தத்தைச் சுற்றி வீடுகளோ கடைகளோ கிடையாது. வெறும் பொட்டல் காடுதான். சுற்றுப்புறத்தில் இருக்கும் நான்கு கிராமங்களில் இருந்து நகரத்துக்கு வேலைக்குச் செல்பவர்களைச் சுமந்து செல்வதற்காக ஆறு பேருந்துகள் ஒரு நாள் முழுவதற்கும் வந்து செல்லும்.  அந்தப் பேருந்து நிலையத்தை ஒட்டியிருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த அப்பு என்ற சிறுவன் ‘ஐந்து ரூபாய்’, ‘ஒரு கப் டீ ஐந்து ரூபாய் என்று கூவி கூவி டீ விற்றுக்கொண்டிருந்தான். அப்பு டீக்கடையெல்லாம் வைத்திருக்கவில்லை. ஒரு தட்டில் டீ கப்களை அடுக்கி வைத்து விற்றுக்கொண்டிருந்தான்.

இன்று தான் முதல் முதலாக டீ விற்கிறான், மொத்தமாக பதினோரு டீ விற்றிருக்கான். மூன்று வாரங்களுக்கு முன்புதான் பள்ளியை விட்டு இப்படி எதாவது ஒரு வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதற்காக நின்றான். அப்புவின் கிராமத்திலேயே டீக்கடை வைத்திருக்கும் அவனது அப்புவுடைய நண்பரான சஞ்சயின் கடையில் வேலைக்குச் சேர்ந்தான் அப்பு. வயல்வெளிகளில் போய் விவசாய வேலை செய்வதைவிட இது சுலபாமனது என்பது அப்புவின் எண்ணம்.

தினந்தொறும் காலையில் எழுந்து பாலும், தண்ணீரும் கடைக்கு எடுத்துச் சென்று, டீயை வருபவர்களுக்கு பரிமாறி, பாத்திரங்களைக் கழுவ வேண்டும். அருகில் உள்ள பேருந்து நிலையத்துக்குக் கொண்டு சென்று டீ விற்கலாம் என்பது அப்புவின் யோசனை, சஞ்சயும் அதற்கு ஒப்புக்கொண்டார். இங்கிருந்து அங்கு எடுத்துச் சென்று விற்கும் டீ சூடாக இருக்க வேண்டும் என்று நினைத்து விரைவாகச் செல்வான்.

அவ்வளவு மந்தமான பொட்டல்காட்டு கூட்ரோடு பேருந்து நிலையத்தில் சூடாகவும் சுவையாகவும் டீ கிடைத்தால் விற்காமலா இருக்கும். விரைவில் அப்புவின் டீ பிரபலமாகிவிட்டது. ஆறு மாதங்களுக்குப் பிறகு அப்புவே சிறிது காசைத் தேற்றி சில பழைய பாத்திரங்களை வாங்கி அந்தப் பேருந்து நிறுத்தத்தை ஒட்டி டீக்கடையைப் போட்டுவிட்டான். கூடவே காலையில் இட்லியும் மாலையில் போண்டா, வடை, பஜ்ஜி போன்ற நொறுக்குத் தீணிகளையும் விற்க ஆரம்பித்துவிட்டான். பள்ளிக்குப் போகாத நேரங்களில் இதற்கெல்லாம் அப்புவின் தங்கையும் உதவி செய்தாள். இந்தக் கடையும் பிரபலமாகிவிட கூட்டம் அதிகமாகக் கூடத் தொடங்கிவிட்டது. பக்கத்து ஊர்களிலிருந்து கூட அப்புவின் கடைக்கு வந்து போனார்கள்.

இரண்டு வருடங்கள் வரை ஒரு சிக்கலும் இல்லை. பயங்கர பிரபலமாகிவிட்டது அப்புவின் கடை.அப்போதுதான் ‘முருகா பஸ் சர்வீஸ்’ பேருந்தின் ஓட்டுநர் அப்புவிடம் பிரச்சினை செய்தார். “உங்கடைக்கு வர கூட்டமெல்லாம் எங்க பஸ்ஸை ரொப்பிடுது. அதனால உங்கடைக்கு வர கூட்டத்துக்காக நீ எங்களுக்குக் காசு தரனும்” என்றார். அப்புவுக்கு இது கொஞ்சம் ஏடாகூடமா பட்டது. “உங்கப் பேருந்துல வரவங்கதான் டிக்கெட் எடுக்குறாங்க இல்ல. அப்புறம் ஏன் நான் தரனும்? அதோட கூட்டம் அதிகமா உன் பேருந்துல ஏறினா உங்களுக்குத்தானே லாபம்?” என்பது அப்புவின் கேள்வி. “நேரா டவுனுக்குப் போறவங்க முழு டிக்கெட் எடுப்பாங்க. உன் கடைக்கு கூட்டம் வரதுனால முழு டிக்கெட் காசு எங்களுக்கு வரது இல்ல. பாதிதான் வருது. அதுவுமில்லாம இங்க இருந்து மூனு ஊர் தள்ளி எங்க பஸ் ஓனரே கடை வச்சிருக்காரு. எல்லாக் கூட்டமும் உங்கடைக்கு வரதுனால அங்க கூட்டம் குறையுது. அதனால நீ எங்களுக்குக் காசு தரனும்” என்று ரொம்பவே சத்தம் போட்டார்.

“நீ உன் வருமானத்தில பத்தில ஒரு பங்கை எங்களுக்குத் தரலைன்னா, எங்க பஸ் இனிமே இங்க நிக்காது” என்று கூறிவிட்டு பேருந்தை கிளப்பிகிட்டு போய்ச்சேர்ந்தார். அப்பு பெரிதாக இந்த மிரட்டலைப் பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. இந்தப் பேருந்து நிறுத்தத்தை எக்கச்சக்கமானோர் பயன்படுத்துவதால் அப்படியெல்லாம் நிறுத்தாமல் போக மாட்டார்கள் என நினைத்தான். சில நாட்களிலேயே மற்ற ஐந்து பேருந்துகளில் இருந்தும் இதே போல அப்புவிடம் காசு கேட்க ஆரம்பித்தார்கள். அப்பு தீவிரமாக மறுத்தான். மறு நாள் காலை, முதல் பேருந்து நிற்காமலே போனது. அடுத்த பேருந்தும் அதே போல நிற்காமல் போனது. அந்தப் பேருந்து நிறுத்தத்தில் இருந்த மொத்த கூட்டமும் ஏன் இப்படி நிறுத்தாமல் போகிறார்கள் எனப் புரியாமல் தவிக்க ஆரம்பித்தனர்.

அடுத்த பேருந்துக்கு மொத்த கூட்டமும் ஆவேசமாக கை காட்டியது. அதுவும் நிறுத்தாமலே போனது. கடைசி பேருந்துக்குப் பிறகு அங்கு ஒரு கார் நின்றது. அதிலிருந்து ராஜன் என்பவர் இறங்கி “நான் இங்கு வந்து செல்லும் பேருந்துகளின் சார்பாகப் பேச வந்திருக்கிறேன். அப்புவின் கடைக்கு வரும் கூட்டம் எங்கள் பேருந்தை ஆக்கிரமித்துக் கொள்கிறது. எங்களுக்கு இதனால் எங்களுக்கு முழு தொகை கிடைக்காமல் போகிறது. இதனால் எங்களுக்கு அப்பு அவர் வருமானத்தில் ஐந்தில் ஒரு பங்கை வழங்க வேண்டும். அப்படி வழங்காத வரை இங்கு பேருந்துகள் நிற்காது” என்றார்.

கூட்டத்தில் இருந்த வயதானவர் ஒருவர், “பயணிகளை அவர்கள் கேட்கும் இடத்திற்கு அழைத்துப் போவதுதானே உங்கள் வேலை? எதற்காக இங்கே வருகிறோம் என்று கேட்பதெல்லாம் உங்கள் வேலை இல்லை. அரசு உரிமம் பெற்று நீங்கள் பேருந்தை இயக்கும் போது இப்படியெல்லாம் செய்வது சரியல்ல” என்றார்.

“இந்த டீக்கடை எங்கள் பேருந்துகளை விட அதிகமாக லாபம் பார்க்கிறது. உங்களுக்கு இந்த டீயும் இட்லியும் வடையும் கிடைப்பதற்கு நாங்களும் ஒரு முக்கியமான காரணம். நாங்கள் உங்களை இங்கு அழைத்து வராவிட்டால் நீங்கள் எப்படி இங்கு வருவீர்கள்? இங்கு விற்கும் இட்லிக்குத் தரும் காசை விட குறைவான காசே எங்களுக்கு டிக்கெட்டாகத் தருகிறீர்கள். இது நியாயமா?” என்று ராஜன் கேட்டார்.

“பேருந்துப் பயணமும் சாப்பாடும் வேறு வேறு, அவற்றுக்கானக் கட்டணங்களும் வேறு வேறு. நாங்கள் கோதுமையை ஒரு கடையில் வாங்குகிறோம், அதை மில்லில் அரைக்கிறோம். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு இடத்திற்குத்தான் காசு தருகிறோம், அதற்குரிய மதிப்புடைய காசு தான் தருகிறோம். மில்லில் போய் அரைப்பதற்கு முன்பாக கோதுமையை வாங்குகிறோம். அப்புவின் கடையில் நாங்கள் சாப்பிட வருவதற்கு முன்பாக உங்கள் பேருந்தில் வருவதைப் போலவே. அதனால், நீங்கள் கேட்பது சரியானது அல்ல” என்றாள் அங்கு நின்றிருந்த இளம்பெண் ஒருத்தி.

விடாமல் ராஜன், “நாங்கள் அப்புவுக்கு வாடிக்கையாளர்களைக் கொண்டு வந்து தருவதன் மூலமாக அவருக்குச் சேவை செய்கிறொம். அதற்கானச் சேவைக் கட்டணத்தைத் தான் கேட்கிறோம்” என்றார்.

“உங்க சேவை எல்லாம் எங்கள ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குக் கூட்டிட்டுப் போறதுதான். உம் பஸ்ல வரும் போது நாங்க உங்களுக்குத்தான் வாடிக்கையாளர்கள், நீங்க எங்களுக்குத்தான் சேவை செய்யுறீங்க, அப்புவுக்கு இல்ல. ஏமாந்தா மொளகா அரைக்கப் பாக்குறியே நீ” என்றார் அங்கிருந்த வயதான தாத்தா ஒருத்தர்.

சுற்றியிருந்த கூட்டமும் அந்த தாத்தா சொல்வதையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தது.

இந்த தாத்தா விபரமாகப் பேசுவதைப் பார்த்த ராஜன் வேறு மாதிரி பேசுவோம் என ஆரம்பித்தார், “பேருந்துல கூட்டம் ரொம்பி வழியுது, கூட்டத்தைக் குறைக்க இன்னொரு புதிய பேருந்தை விட வேண்டியிருக்கு. அந்தப் புதிய பேருந்துகளுக்காக செலவிட தான் இந்தத் தொகை. நாங்கள் சொல்வது மக்களோட நன்மைக்காகத் தான், எங்களுக்காக அல்ல. இப்போ எங்களோட லாபமெல்லாம் இருக்குற பேருந்துகளோட மேம்பாட்டுக்கேப் போயிடுது.”
“சனங்களோட நல்லதுக்குத்தான்னா மூனு வருசமா ஒடைஞ்ச கண்ணாடியை வச்சுகிட்டே இந்த ஓட்டை வண்டி ஓடுதே, அதை ஏன் மேம்படுத்தல? வர லாபமெல்லாம் உன் சொகுசுக் காருக்குத்தானே போவுது” என்றான் அங்கிருந்த ஒரு இளந்தாரி. கூட்டத்துக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

“உங்க பஸ்ஸே உருண்டுகிட்டுத்தான் கெடக்கு, இதுல வழில வழில வேற நின்னுத் தொலைஞ்சிடும். முருகா பஸ் ஓனரு நடத்துற கடைல விக்குற இட்லியை வச்சு ஊடே கட்டலாம், அதுக்குத் தொட்டுக்குறச் சட்னிக்கு யானை வெலையும், குதிரை வெலையும் குடுக்கனும். உம்பஸ்ஸு டிரைவரும் டிக்கெட் கிழிக்குறவனும் பேசுற பேச்சுக்கும் ஏச்சுக்கும் வாயுலயேதான் புண்ணு வரும்.” என்றார் இன்னொருவர் கூட்டத்திலிருந்து.

அதுவரை அமைதியாக இருந்த அப்பு, “நீங்க கடையை ஒழுங்கா நடத்துறக்கு சட்டம் போடுங்க நான் அதையெல்லாம் செய்யுறேன். ஆனா, உங்களுக்கு குடுக்க எங்கிட்ட காசும் இல்ல, கவர்மெண்டு ஆபிசுக்கு அலைய நேரமும் இல்லை” என்றான்.

ராஜன் ஒரே அடியாகக் கத்த ஆரம்பித்துவிட்டார். “இந்தப் பேருந்தை ஓட்டுறதுக்கு அரசாங்கத்துக்கு நாங்க எவ்ளோ காசு கட்டனும் தெரியுமா? போனமுறை பஸ் ரூட் வாங்க ஏலம் எடுத்தப்போ எவ்ளோ காசு கட்டினோம் தெரியுமா? அதனால, இப்போ பேருந்துகளை ஒழுங்கா ஓட்ட காசு இல்லாமத் தவிக்குறோம்.”
“ஏலம் எடுக்கும் போதே இவ்ளோதான் லாபம் வரும்னு முடிவு செஞ்சு அதுக்கேத்த மாதிரிதான் எடுத்துருக்கனும். நீங்க அரசுக்கு ஏலத்துல குடுத்த காசு உங்களுக்கும் அரசுக்கும் இருக்கும் சங்கதி. அதுக்கு நாங்களோ இல்ல அப்புவோ எப்படி பொறுப்பாவ முடியும்?” என்றார் கூட்டத்தில் இருந்த ஒரு மத்திய வயது நபர்.

“நாங்க அதிகத் தொகைக்கு ஏலம் எடுத்துட்டோம், இப்போ பின்னாடி போய் எதையும் மாத்த முடியாது. முடிஞ்சது முடிஞ்சதுதான்” என்று இன்னும் கோபமானார் ராஜன். அதே மத்திய வயதுக்காரர் அதற்கு “அரசு உங்ககிட்ட இருந்து அதிகமா வாங்குன தொகையை உங்களுக்கு ஏத்த மாதிரி திரும்ப கொடுக்க அவங்க தான் பாக்கனும். கிராமப் பகுதிகளுக்கு பேருந்து விட ஒரு திட்டம் இருக்குறதா நாங்க கேள்விப்பட்டோமே, அதுல எதாச்சும் செய்து உங்களுக்கு உதவட்டுமே ” என்றார்.

இந்தக் கிராமத்து மக்கள் அதிகம் தெரிந்து வைத்திருக்கிறார்கள், இவர்களை அவ்வளவு எளிதாக ஏமாற்ற முடியாது போல் இருக்கிறதே. வேறு எதாவது யோசிக்க வேண்டும் என முடிவு செய்து அரசாங்கத் திட்டங்கள் பற்றி சேவை பற்றி ஏதேதோ உளற ஆரம்பித்தார் ராஜன்.

கூட்டத்தில் இருந்த வயதானவர், “அவ்ளோதானா உன் பேச்சும் ஏமாத்து வேலையும்? எங்ககிட்ட உன் பருப்பு வேகாது. ஒழுங்கா அரசாங்கத்துகிட்ட போட்ட ஒப்பந்தப்படி பஸ்ஸை ஓட்டு, இல்லைன்னா இருக்குறதும் நக்கிட்டுப் போயிடும் என்றார்.”
ராஜன் இனிமேல் ஒன்றும் முடியாது என்பதைப் புரிந்து கொண்டு, வேக வேகமாக காரில் ஏறிக் கிளம்பிவிட்டார்.
வெளியே எட்டிப்பார்த்து “அப்பு தீவிரவாதிகளுக்கு இட்லியும் டீயும் விற்கிறான்” என்று கத்திக்கொண்டே போனார்.
—–

குறிப்புகள்:
இக்கதை Net Neutrality தொடர்பான நிகழ்வுகளைப் புனைவாக்கம் செய்திருக்கிறது.
இக்கதையில் வரும் பேருந்து உரிமையாளரின் சார்பில் பேசுபவரைப் போலவும் அவர்கள் கோரும் கோரிக்கைகளைப் போலவுமே இந்தியாவின் தொலைதொடர்பு நிறுவனங்கள் பேசுகின்றன, கோரிக்கை வைக்கின்றன.
பேருந்து நிறுவனங்களுக்காக வக்காலத்து வாங்கும் ராஜனைப் போலவே, இந்தியத் தொலை தொடர்பு நிறுவனங்களுக்காக TRAI அமைப்பு ஒரு வரைவை உருவாக்க உதவியிருக்கிறது. நீங்களே அவற்றைப் பின்வரும் இணைப்பிலிருந்து பார்க்கலாம்.

TRAI CP: http://www.trai.gov.in/WriteReaddata/ConsultationPaper/Document/OTT-CP-27032015.pdf
COAI press releases: http://www.coai.com/press-release/news-desk
Warning: செய்திக்குறிப்பைப் படிக்க அங்கு பதிவு செய்திருக்க வேண்டும். (!)
1 On average, TSPs earn ₹0.25p per MB for data, ₹0.85p per MB for voice and ₹1,125 per MB for SMS. (TRAI CP 2.37, 2.38) Judging by numerous ads for data plans, TSPs still make a comfortable profit on data. That means voice is priced high, and SMS prices are simply insane. Note also that data revenue is growing 100% year-on-year (TRAI CP 2.36), enabling TSPs to make more money today than ever before.

2 TRAI CP 1.2: “Telecommunication Service Providers (TSPs) [are] being overwhelmed by online content.” Note TRAI’s biased tone.

3 TRAI CP 1.2: “the term over-the-top (OTT) refers to applications and services which … ride on operators’ networks”

4 TRAI CP 6.9: “the business models of the OTT industry rely on free riding over the network of the TSPs.” The use of the term free ride here and in several other places exposes the TRAI’s bias on this issue.

5 TRAI CP 1.4: “TSPs realise revenues solely from the increased data usage [and] do not realise any other revenues;” Also, CP 5.33: “[OTTs] have a high valuation for customers, consequently, the terminating TSP can demand an extra fee”

6 TRAI CP 1.4: “OTT providers make use of the TSPs’ infrastructure to reach their customers” In reality, consumers use the infrastructure to reach OTT providers, and they pay for this. Nice, TRAI, but no cigar.

7 The Economist, Jan 31, 2015, quoted by TRAI CP p93: “The operators on the other hand argue that the increasing internet traffic can sustained by investments in upgradation of networks which will be possible by increase in profits.”

8 TRAI CP 2.43: Disruption to the existing business of TSPs … would jeopardize the national objective of affordable and ubiquitous telephone and broadband access across the country.

9 TRAI CP 3.4: “The TSPs fall under a regulatory regime whilst OTT players are simply bypassing such a regime”

10 TRAI CP 3.8: “This regulatory imbalance or arbitrage opportunity allows them to offer services or goods that are cheaper or free”

11 TRAI CP compares WhatsApp with SMS, Skype with phone

12 COAI press release: “[COAI] expressed disappointment over the exorbitant winning price points for the operators at the latest spectrum auctions which concluded today.” I’m sorry, who were the bidders again?

13 COAI press release: “…while the industry is solidly behind the government’s ambitious vision of Broadband for All, Smart cities, rural penetration, 
E-governance, etc., and is eager to make this happen; it cannot be achieved by starving the industry of the needed resources to invest in these objectives.” Yes, they really did say “rural penetration.”

14 TRAI CP 3.22: “during a terrorist attack, it becomes extremely complex to intercept such calls [and therefore VoIP should be banned]”
————
அனைத்து இணைய தளங்களும் சமமாக கிடைக்க வேண்டிய இணையத்தை, ஒவ்வொரு தளத்தை அனுமதிப்பதற்கும், தள உரிமையாளரிடமும், பயனரிடமும் கூடுதல் பணம் வசூலிக்க, ISP நிறுவனங்கள் முனைகின்றன.
இதைத் தடுக்காவிடில், அவர்கள் அனுமதிக்கும் தளங்களை மட்டுமே நாம் பார்க்க முடியும்.
இதன் விபரீதங்களை அறிய, இந்த காணொளிகளைப் பாருங்கள்.




இவற்றையும் படியுங்கள்
http://www.vikatan.com/news/article.php?module=news&aid=45141&utm_source=facebook&utm_medium=EMagazine&utm_campaign=1

http://www.vikatan.com/news/article.php?aid=45179&utm_source=facebook&utm_medium=EMagazine&utm_campaign=1

நாம் செய்ய வேண்டியது என்ன?

இந்த பிரச்னை குறித்து ஏப்ரல் 24ஆம் தேதிக்குள் TRAI அமைப்புக்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்.
http://www.savetheinternet.in/ இங்கு சென்று “Respond to TRAI now” என்ற இணைப்புக்குச் சென்று, TRAI க்கு மின்னஞ்சல் அனுப்புக.
நன்றி!

எழுத்து – மாமூலன்

நன்றி: http://www.kaniyam.com/net-neutrality-short-story/

Mar 17, 2015

ரிச்சர்டு ஸ்டால்மன்

ரிச்சர்டு ஸ்டால்மன்
தி இந்து நாளிதழில் வந்த செய்தி

ஜிஎன்யூ மென்பொருளை அறிமுகப்படுத்தியவரும், சுதந்திர மென்பொருள் இயக்க நிறுவனருமான ரிச்சர்டு மாத்யூ ஸ்டால்மன் (Richard Matthew Stallman) பிறந்த தினம் இன்று (மார்ச் 16). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் (1953) பிறந்தவர். சிறு வயதிலேயே கம்ப்யூட் டரில் ஆர்வம் கொண்டி ருந்தார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் வகுப்பில் சேர்ந்தது இவரது கணினி ஆர்வத்தைப் பெருக் கெடுக்க வைத்தது.

16 வயதில் தனது முதல் புரோகிராமை ஐபிஎம் நியூயார்க் அறிவியல் மையத்தில் ஐபிஎம்-360 கணினியில் எழுதினார். ராக்ஃபெல்லர் பல்கலைக்கழக உயிரியல் ஆய்வுக்கூடத்தில் தன்னார்வ உதவியாளராக இருந்தார். 1970-ல் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.

அப்போது எம்ஐடியின் செயற்கை நுண்ணறிவு ஆய்வுக்கூடத்தில் (ஏஐஎல்) புரோகிராமராக இருந்தார். கல்லூரியில் அனைவராலும் ‘ஆர்எம்எஸ்’ என்று அழைக்கப்பட்டார். 1974-ல் இயற்பியலில் பட்டம் பெற்றார். மென்பொருள் பயன்பாட்டை மேம்படுத்தினார்.

மென்பொருள் சுதந்திரம் பற்றி நிறைய கட்டுரைகள் எழுதியுள்ளார். ‘சுதந்திரமாக கணினியைப் பயன்படுத்து வது’ என்பதை இலக்காகக் கொண்டு ‘சுதந்திர மென் பொருள் இயக்கம்’ (Free Software Movement) என்ற அமைப்பைத் தொடங்கினார்.

 ‘கட்டுப்பாடுகளுடன் கூடிய மென்பொருட்கள், பயனாளர்களை உளவு பார்க்கின்றன. அவர்களை வரம்புமீறிக் கட்டுப்படுத்துகின்றன’ என்பார். மென்பொருட்களை அனைவரும் சுதந்திரமாகப் பயன்படுத்துதல், ஆய்வு செய்தல், விநியோகித்தல், மாற்றங்களைக் கொண்டு வருதல் ஆகியவை பயனாளர்களின் அடிப்படை உரிமை என்பதை தொடர்ந்து வலியுறுத்திவருகிறார். இதைத்தான் இவர் ‘கட்டுப்பாடற்ற, சுதந்திர மென்பொருள்’ என்கிறார்.

உலகம் முழுவதும் 65 நாடுகளுக்கு மேல் சுற்றுப்பயணம் செய்துள்ளார். மென்பொருள் பயன்பாட்டு சுதந்திரம், மென்பொருள் காப்புரிமை மற்றும் இதுதொடர்பான அம்சங்கள் குறித்து ஏராளமான கூட்டங்களில் பேசியுள்ளார்.

 ‘ஃப்ரீ ஆஸ் இன் ஃபிரீடம்’ என்ற நூல் இவரது வாழ்க்கை வரலாற்றை அறிய உதவும் நூலாகத் திகழ்கிறது. இவர் மேம்படுத்திய ஜிஎன்யூ (GNU)பிராஜக்ட், கட்டுப்பாடற்ற மென்பொருள் அடிப்படையில் அமைந்த இயங்குதளத்தை உருவாக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட செயல் திட்டம். அதை இவர் 1983-ல் வெளியிட்டார்.

சுதந்திர மென்பொருள் அறக்கட்டளை உட்பட பல நிறுவனங்களைத் தொடங்கினார். தத்துவம் சார்ந்த எழுத்தாக் கங்களையும் ஜிஎன்யூ அமைப்பு வெளியிட்டுவருகிறது.

‘எனது சுதந்திர மென்பொருள் இயக்கத்துக்கு ஊக்கமளிப்பவர்கள் மகாத்மா காந்தி, மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலாதான்’ என்கிறார். தனது பணிகளுக்காக ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். உலகம் முழுவதும் பல பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன.

‘எனக்கு எப்போதுமே பணம் முக்கியமாக இருந்ததில்லை. நான் அதன் கட்டுப்பாட்டில், அதற்கு அடிமையாக இருக்க விரும்பியதில்லை’ என்று அடிக்கடி கூறுவார். கட்டுப்பாடு இல்லாத சுதந்திர மென்பொருள் பயன்பாட்டை வலியுறுத்தி தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகிறார்.

நன்றி: தி இந்து (தமிழ் நாளிதழ்)

Feb 25, 2015

இணைய தமிழில் புதிய மாற்றம் பெரியார் அறிமுகப்படுத்திய எழுத்துச் சீர்திருத்தம்


சென்னை, பிப்.25_ இணைய தளத்தில் தமிழ் இன்று ஆதிக்கம் செலுத்து வதற்கு முக்கிய காரணம் தந்தை பெரியார் அறிமுகப் படுத்திய தமிழ் எழுத்துச் சீர்திருத்தமே என்று இந்து ஏட்டில் இன்று (25.2.2015) வெளிவந்துள்ள சிறப்புக் கட்டுரை கூறுகிறது.

இணையதமிழ் (i தமிழ்) என்ற தமிழ் எழுத்துருவின் நவீன வடிவத் திட்டத்தை கார்கி ஆராய்ச்சி மய்யம்  செயல் படுத்த முனைந்துள்ளது. தமிழ் பல நூற்றாண்டு களாக பல்வேறு மாற்றங் களை சந்தித்து வந்தது. எழுத்துருவில் மாற்றங் களைச் சந்தித்தாலும் அதன் தொன்மை மாறா மல், வளமை குன்றாமல் இன்றளவும் இளமையாக, மேலும் புதுமையாக திகழ் வதே இதன் தனித்துவ மாகும். இதனடிப்படையில் கணினி எழுத்திற்கேற்ப எளிமையான முறையில் தமிழ் எழுத்துக்களில் மாற் றங்களைக் கொண்டுவர கவியரசர் வைரமுத்துவின் மகன் கார்க்கி தன்னுடைய ஆய்வு மய்யத்தின்மூலம் புதிய எழுத்துருக்களை வர விருக்கும் தமிழ் இணைய வழி மாநாட்டில் ஆய்வா ளர்கள் முன்பு வைக்க உள்ளார்.

மதன்கார்க்கி அவரது குழுவினரான சுதர்சனம் நேசமணி மற்றும் தமிழ்ச் செல்வி ஆகியோர் ஒன்றி ணைத்து 216 உயிர்மெய் எழுத்திற்கும் புதிய வரிவடி வத்தை உருவாக்கியுள்ளனர். முக்கியமாக ஒருங்குறி யில் (யுனிக்கோட்) முறை யில் இன்றளவும் சில குறை பாடுகள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. முக் கியமாக தற்போது மிகவும் வேகமாக வளர்ந்துவரும் ஆண்டிராய்டு மற்றும் அய்போன் போன்ற தளங் களில் யுனிக்கோட் எழுத் துருக்கள் சரிவர தெரிவ தில்லை.

இதனடிப்படை யில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு கார்கி ஆய்வு மய்யம் வேகமாக வளர்ந்துவரும் இணைய தமிழ் உலகில் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையிலும், அதேநேரத்தில் இனிவரும் காலத்திலும் இணைய வழித் தமிழ் மிகவும் எளிய முறையில் வரும் தலை முறைக்கும் பயனளிக்கும் விதத்தில் பல்வேறு மாற் றங்களைக் கொண்டுவந் துள்ளனர்.

i தமிழ் எழுத்துருக்கள் நவீன ஸ்மார்ட் போன் களின் எழுது பலைகை களில் (keyboard) எவ்வித சிறப்புக் குறியீடுகள் இல் லாமல் சாதாரண எழுது பலகை போன்றே அவற்றை நாம் பயன்படுத்தமுடியும். தமிழ் எழுத்துருக்களில் மாற்றம் நூற்றாண்டுக ளாகத் தொடர்ந்து மாறிக் கொண்டு வந்தாலும் வீர மாமுனிவர் காலத்தில் தமிழ் எழுத்துக்கள் எளிமையாக் கும் முயற்சி துவங்கியது.

தந்தை பெரியார் தொலைநோக்கிற்கு மிகப் பெரும் உதாரணங்களுள் ஒன்றாக தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தைக் கூறலாம். அவரது காலத்தில் தமிழ் அச்சுக்கள் தோன்ற ஆரம் பித்துவிட்டன. தமிழ் அச் சுக்கோர்வைக்கு அப்போதி ருந்த வடமொழிக் கலப்புத் தமிழ் ஏற்றதாக இருக்காது என்ற தொலைநோக்குப் பார் வையில் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தார்.  பெரியாரின் இந்த எழுத்துச் சீர்திருத்தம் என்பது இன்று இணையம் வரை வந்து விட்டது.    இந்திய மொழிகளில் இணையத்தில் தமிழின் ஆதிக்கம் இன்று முதலிடத் தில் இருப்பதற்கு முக்கிய காரணம் பெரியார் கொண்டு வந்த தமிழ் சீர்திருத்தம் தான். பெரியாரின் எழுத் துச் சீர்திருத்திற்கு முன்பாக இருந்த தமிழையொட் டியே மலையாளம், தெலுங்கு கன்னடம் போன் றவை இருந்தன. ஆனால், அம்மொழிகளால் எழுத் துச் சீர்திருத்தம் பெற இய லாமல் இன்றளவும் இணைய உலகில் பின்தங் கியே உள்ளது. சீன மொழி இன்றள வில் உலகம் முழுவது அதி கமாக பேசும் மொழிகளில் முதன்மையானதாக உள் ளது. நவீன சீனாவைப் படைத்த சான் யாட் சென் சீனமொழியை நவீன காலத்திற்கு ஏற்ப மாற்றம் செய்யவேண்டும். நவீன வளர்ச்சிக்கு ஏற்ப மொழி யில் மாற்றம் செய்யவேண் டும் என்று கூறினார். அவரது ஆலோசனையின் படி சீன மொழியில் ஏற் பட்ட எழுத்துரு மாற்றம் இன்று உலகின் பொருளா தார வல்லரசாக மாற்றி யுள்ளது.

கார்கி ஆய்வு மய்யம் கொண்டுவந்துள்ள நவீன தமிழ் எழுத்துருக்கள்மூலம் பதிப்பிற்குச் செல்லும் போது அதிக இடங்கள் சேமிக்கப்படும் இதன் மூலம் காகித சேமிப்பு மாத் திரமல்லாமல் காகிதத்திற் காக வெட்டப்படும் மரங்கள் சேமிக்கப்படும்.

(இன்றைய ஆங்கில இந்து ஏட்டில் கார்த்திக் சுப்பிரமணியம் எழுதிய ‘‘A Proposal to simplify the Tamil Script’’   கட்டுரையின் தமிழாக்கம் இது).

நன்றி: விடுதலை