Sep 21, 2012

மென்பொருள் விடுதலை நாள்-2012 சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் -22, 2012 அன்று நடைபெறுகிறது


இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ம் தேதி, டி.ஜி வைஷ்ணவ் கல்லூரியில் நடைபெற்ற மென்பொருள் விடுதலை நாள் கொண்டாட்ட நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. அதன் தொடர்ச்சியாக மீண்டும் அண்ணா பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் மாதம் 22-ம் தேதி, ஒரு மென்பொருள் விடுதலை நாள் கொண்டாட்டம் நடைபெறவிருக்கிறது.

தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் நிறுவனத்தைச் (Free Software Foundation Tamil Nadu (FSFTN)) சேர்ந்த தன்னார்வலர்கள், கிண்டி பொறியியல் கல்லூரி குனு/லினக்ஸ் குழுவினருடன் இணைந்து இந்த மென்பொருள் விடுதலை நாளைக் கொண்டாடுகின்றனர். இது மாநில அளவில் வரும் சனிக்கிழமை, செப்டம்பர் மாதம் 22-ம் தேதி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், கிண்டி பொறியியல் கல்லூரி விவேகானந்தா கலையரங்கத்தில் நடைபெறவிருக்கிறது.

அன்று நாள் முழுவதும் கட்டற்ற மென்பொருள் பற்றிய உரைகளும், செயல் முறை விளக்கங்களும் நடைபெறும். அத்துடன் கட்டற்ற மென்பொருள்கள் மற்றும் அவற்றின் இயக்கம்/பயன்களை விளக்கும் கண்காட்சியும் அமைக்கப்பட்டிருக்கும்.

உலகம் முழுவதும் கட்டற்ற மென்பொருள்கள் மற்றும் குனு/லினக்ஸ் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த மென்பொருள் விடுதலை நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாளின் குறிக்கோளைப் பற்றி அதன் இணைய தளத்தில் (http://softwarefreedomday.org/) கூறப்பட்டுள்ளதாவது:-

- கட்டற்ற மென்பொருள் ஆக்கத்தையும், அதை உருவாக்கியவர்களையும் கொண்டாடுதல்
- கட்டற்ற மென்பொருள் பற்றி விளக்கிக் கூறி, அதன் பயன்பாடுகளை உற்சாகப்படுத்ததுதல்
- பயனீட்டாளர்கள் தொழில் நுட்பங்கள் வழியாக வாய்ப்புகளை சரி சமமாக அணுக வழி செய்தல்
- இந்த தகவல் தொழில் நுட்ப  சமூகத்தில் ஒவ்வொருரின் கடமைகள், உரிமைகள்
பற்றிய ஆக்கபூர்வமான விவாதத்திற்கு வழி வகுத்தல்
- இதே தொலைநோக்கு கொண்ட தனிநபர்களையும், நிறுவனங்களையும் இணைத்துக் கொள்ளுதல்
- நடைமுறைக்கேற்ற தெளிவான அமைப்பாகச் செயல்படுதல்

இந்த நிகழ்ச்சியின் மூலம் பொதுமக்களை அணுக நாங்கள் விரும்புகிறோம். “சுதந்திரமான அறிவு” என்ற தத்துவத்தையும்,”இணைய சுதந்திரம்” என்ற பிரச்சினையையும், கணினித்துறை பாகுபாட்டை இணைக்கும் பாலமாக இருக்கும்கட்டற்ற மென்பொருளின் பங்கைப் பற்றியும் விவாதிக்க இருக்கின்றோம். இந்நிகழ்ச்சியில் செப்டம்பர் மாதம் 22-ம் தேதி அன்று, பொதுமக்கள் தவிர மாணவர்கள், பல்துறை வல்லுனர்கள் என்று ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் பல்வேறு கல்லூரிகளிலிருந்தும் மாணவர்கள் பலர் தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் நிறுவனத்தின் இடைக்கால பொது அவையில் (Interim General Council) சேர  வருகின்றனர்.மதுரை மற்றும் பாண்டிச்சேரி குனு/லினக்ஸ் குழுவினர் தங்களது காட்சியரங்குகளில் அவர்களுடைய நடவடிக்கைகளைப் பற்றி விளக்கம் தருவர்.

தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் நிறுவனம், பலரை கட்டற்ற மென்பொருள் இயக்கத்தில் சேர்த்து வருங்கால முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கக் கூடிய ஒரு கட்டற்ற கணினி கட்டமைப்பை உருவாக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக இந்த நிகழ்ச்சியைக் கருதுகிறது. இந்த நிகச்சியில் தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் நிறுவனத்தைச் சேர்ந்த தன்னார்வலர்கள், மாணவர்கள் மற்றும் தனி நிறுவனங்கள் கட்டற்ற மென்பொருள் பற்றிய செயல் முறை விளக்கங்களை செய்து காட்டுவர். ஆங்கிலத்திலும், தமிழிலும் Office, Image Editing Tools, Audio/Video Editing Tools, Games, Programming Languages like Python, PHP, Content Management Systems like Drupal and Joomla, Virtualization Tools  ஆகியவற்றின் விளக்கவுரைப் பாடங்கள் நடத்தப்படும். குனு/லினக்ஸை எப்படி கணினியில் நிறுவுவது என்பதும் ஒரு பகுதியில் செய்து காட்டப்படும்.

மாணவர்களும் கலந்து கொண்டு தங்களுக்கு விருப்பமான கட்டற்ற மென்பொருள்கள் பற்றித் தெரிந்து கொள்ள வருவார்கள் என்று நம்புகிறோம்.மாணவர்களுக்குத் தெரிந்திராத பல கட்டற்ற மென்பொருட்களைப் பற்றிச் சொல்லி, அவர்களின் ஆர்வத்தைத் தூண்டி விட்டால் இன்னும் பலர் கட்டற்ற மென்பொருள்களைப் பயன்படுத்துவதற்கு வாய்ப்பு இருக்கிறது. உங்களுக்குக் கட்டற்ற
மென்பொருட்களைப் பற்றி போதுமான அளவு தெரிந்திருந்து, ஒரு பதினைந்து நிமிடம் பேச முடியுமானால் நீங்களும் முன் வந்து, உதவி செய்யுங்கள். நாள்  : செப்டம்பர் 22-ம் தேதி, 2012 – சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இடம் : விவேகானந்தா கலையரங்கம், கிண்டி பொறியியல் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழக வளாகம், சென்னை 

அனுமதி இலவசம்
அனைவரையும் வருக! வருக! என்று அழைக்கின்றோம்.

No comments: