Showing posts with label தந்தை பெரியார். Show all posts
Showing posts with label தந்தை பெரியார். Show all posts

Oct 26, 2018

தீபாவளி நட்டக் கணக்கு

தீபாவளிப் பண்டிகையால் ஏற்படும் கஷ்ட நஷ்டங்கள் பற்றித் தந்தை பெரியார் எடுத்துக் காட்டும் கணக்கு விபரம்:-

1. துணி தேவை இருக்கின்றவர்களும், தேவை இல்லாதவர் களும் "தீபாவளி"ப் பண்டிகையை உத்தேசித்துப் புதுத் துணிகளை வாங்குவது.

2. மக்கள், மருமக்களை மரியாதை செய்வதற்கென்று,  யோக்கியதைக்கு மேலானவும், சாதாரணமாக உபயோகப்படுத்து வதற்கு ஏற்றனவல்லாதனவுமான துணிகள் வாங்குவது.

3.அர்த்தமற்றனவும் பயனற்றனவுமான வெடி மருந்து சம்பந்தப்பட்ட பட்டாசு வகைகளை வாங்கிக் கொளுத்துவது.

4. பலர் இனாம் என்றும், பிச்சை என்றும் வீடு வீடாய்க் கூட்டம் கூட்டமாய்ச் சென்று பல்லைக் காட்டிக் கெஞ்சிப் பணம் வாங்கி அதைச் சூதாட்டத்திலும், மதுக்குடியிலும் செலவழித்து நாடு சிரிக்க நடந்து கொள்வது.

5. இவற்றிற்காகப் பலர் ஊர்விட்டு ஊர் பிரயாணம் செய்து பணம் செலவழிப்பது.

6. அன்று ஒவ்வொருவர் வீட்டிலும் அமிதமான பதார்த்தங் களை (பலகாரங்கள் - காய்கறி, சாப்பாட்டு வகைகளை)த் தேவைக்கு மிகுதியாகச் செய்து அவைகளில் பெரும்பாகத்தைக் கண்டவர்களுக்குக் கொடுப்பதும், வீணாக்குவதும்.

7. இந்தச் செலவுகளுக்காகக் கடன் படுவது.