May 6, 2018

இடஒதுக்கீடு - தொடரும் விவாதம்


நலங்கிள்ளி எழுதிய 'இடஒதுக்கீடு - தொடரும் விவாதம்' புத்தகத்தை அண்மையில் கிண்டில் கருவியின் மூலமாக படித்து முடித்தேன். அற்புதமான புத்தகம். தமிழகம் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக இருப்பதற்கு தமிழகத்தில் கடைபிடித்து வரும் 69% இட ஒதுக்கீடுதான் காரணம். ஆனால் கொடுமை என்னவென்றால் அந்த இட ஒதுக்கீட்டின் மூலமாகவே சமூகத்தில் கல்வி, வேலைவாய்ப்பை பெற்றவர்கள் அதற்கு எதிராக பேசுவதுதான்.

அந்தவகையில் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்களும், இட ஒதுக்கீட்டைப் பற்றி தெரியாதவர்களும் அதைப்பற்றி கொள்வதற்காகவும் கேள்வி-பதில்(கேள்விகளை கீழே கொடுத்திருக்கிறேன்) வடிவில் அருமையாக நலங்கிள்ளி அவர்கள் இந்த புத்தகத்தை எழுதி வெளியிட்டிருக்கிறார். 2006 ஆம் ஆண்டு அச்சுப்பதிப்பாக சாளரம் பதிப்பகம் மூலம் வெளியிடப்பட்ட இந்த புத்தகம் மின் பதிப்பாக, கிண்டில் பதிப்பாக இப்போது வெளியிடப்பட்டிருக்கிறது.

சமூகநீதியில் அக்கறை உள்ளவர்களும், இளைஞர்களும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகங்களில் ஒன்று.

புத்தகத்தில் இடம் பெற்றிருக்கின்ற கேள்விகள்:

1. உயர்கல்விப் பயிலகங்கள் என்பவை யாவை? அங்கே இடஒதுக்கீடு தரப்பட்டுள்ளதா?

2. ஆனால் அரசின் இந்த முடிவு உயர் கல்வியை மண்டல்மயப்படுத்துவதாகும் என்று பல ஆங்கில, இந்தி ஊடகங்கள் அப்போதே விமர்சித்தன. இப்போதும் இத்தகைய விமரிசனங்கள் வெவ்வேறு சூழல்களில் எழுகின்றன. மண்டல்மயப்படுத்துவது என்றால் என்ன?

3. இந்த ஊடகங்கள் மண்டலை அன்று வி.பி.சிங் காலத்திலும் எதிர்த்தன, இன்றும் காலத்திலும் எதிர்க்கின்றன, இப்படித் தொடர்ந்து எதிர்ப்பதற்கு காரணம் என்ன?

4. தனியார்த் துறை முதலாளிகள் இந்த இட ஒதுக்கீட்டு எதிர்ப்புப் போராட்டத்தைத் தூண்டிவிட வேண்டிய காரணம் என்ன?

5. தில்லியில் மருத்துவ மாணவர்கள் விளக்குமாற்றால் சாலை பெருக்குவது தள்ளுவண்டியில் வாழைப்பழம் விற்பது, வண்டி இழுப்பது, "ஷூ பாலிஷ்" போடுவது என விதவிதமாக ஊடகங்களுக்குப் போஸ் கொடுத்தார்களே ஏன்?

6. அப்படியானால் இடஒதுக்கீடு என்பது முற்பட்டவர்களைப் பிற்பட்டவர்கள் ஆக்குவதா?

7. இட ஒதுக்கீட்டைக் கண்டுபிடித்தது யார்?

8. இட ஒதுக்கீடு என்பது சலுகையா?

9. முன்னோர்கள் செய்த தவறுக்கு இப்போதுள்ள முற்பட்ட சாதியினரைப் பழிவாங்குவது நியாயம் தானா?

10. இதற்கு ஒரு முடிவே கிடையாதா? எத்தனை ஆண்டுகளுக்குத்தான் இட ஒதுக்கீடு வழங்குவது?

11. இந்த உலகமயமாக்கக் காலத்தில் இன்னும் சாதி வேறுபாடு பேணப்படுவதாகச் சொல்வது சரிதானா? பொது இடங்களில் சமத்துவம் காக்கப்படுவதைக் கண்கூடாகக் காண்கிறோமே? இட ஒதுக்கீடு இன்னமும் தேவைதானா?

12. இட ஒதுக்கீடின்றி உயர் கல்வி பயின்று சாதித்துக் காட்டிய தலித் மாணவர்கள் இல்லையா?

13. இட ஒதுக்கீட்டின் விழுக்காட்டை அதிகரித்துக் கொண்டே போகலாமா? இதற்கொரு வரம்பு வேண்டாமா?

14. சட்டத்தின் முனை அனைவரும் சமம் என்னும்போது கல்வி, வேலை வாய்ப்புப் போட்டியிலும் அனைத்துச் சாதியினரையும் சமமாக நடத்த வேண்டாமா?

13. அரசு ஒரு பக்கம் சாதிவேறுபாட்டை ஒழிப்போம் என்கிறது. மறுபுறம் பள்ளிப் பிஞ்சுகளிடமே சாதி கேட்கிறது. இது முரண்பாடில்லையா?

15. அரசு சாதி கேட்பதால் நாட்டில் சாதிப் பிளவுகள் ஏற்பட்டு அமைதி கெடாதா?

16. சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கேட்பவர்கள் சாதியவாதிகள் அல்லவா?

17. எல்லா மாமரங்களும் ஒன்றே போல் செழித்துக் குலுங்குவதில்லையே, மாமரங்களுக்குள்ளேயே சாதி வேறுபாடுகள் இருக்கும் போது மனிதர்களுக்குள்ள சாதி வேறுபாட்டை அப்படியே எடுத்துக்கொள்ளாமல் இட ஒதுக்கீடு என்றெல்லாம் அலட்டிக்கொள்வது ஏன்?

18. பாரப்பனர்களிலும் ஏழைகள் இருக்கிறார்களே? சாதி வகையில் பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதைவிட பொருள் வகையில் பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தானே சிறந்த சமூநீதியாக இருக்கும்?

19. மண்டல் குழு ஒரு பழைய மக்கள் தொகைக் கணக்கை ஆய்விற் கொண்டது உண்மை தானா?

20. மேல் சாதியினரும் பிற்படுத்தப்பட்ட சாதியினரும் பட்டியல் சாதியினராகப் பொய்ச் சான்றிதழ் காட்டி இட ஒதுக்கீடு பெறுவது முறை தானா?

21. ஏற்கனவே இட ஒதுக்கீட்டைப் அனுபவித்து முன்னேறிவிட்டவர்களில் அடுத்தடுத்த தலைமுறையினரும் இந்த உரிமையைக் கேட்பது நியாயம் தானா?

22. அரசுத் துறையில் பாட்டாளிகளுக்கு இடம் கேட்பது ஒடுக்கும் அதிகார வர்க்கத்துக்கு நாமே ஆள்சேர்த்துக் கொடுத்தது போல் ஆகிவிடாதா?

23. இட ஒதுக்கீட்டுக் கொள்கை வாக்கு வங்கியைக் குறிவைத்து அரசியல்வாதிகள் செய்யும் சதிதானே?

24. இட ஒதுக்கீட்டுக்குப் பாடுபடுவதாகச் சொல்லி கொள்ளும் அரசியல்வாதிகள் தங்களது உதவியாளர்களையும் மருத்துவர்களையும் பட்டயக் கணக்கர்களையும் பார்ப்பனர்களாகப் பார்த்துவைத்துக் கொள்வது இரட்டை வேடமில்லையா?

25. உயர் கல்வி இட ஒதுக்கீட்டுச் சிக்கலில் தில்லி அரசு அவசர அவசரமாக முடிவெடுத்து விட்டதா?

26. மார்க்சிஸ்டுக் கட்சியும் சங் பரிவாரமும் சொல்வது போல் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் பொதுக்கருத்தை வளர்த்தெடுத்து இட ஒதுக்கீட்டைக் கொண்டுவர முடியாதா?

27. இட ஒதுக்கீடு சமூகச்சிக்கல்கள் யாவற்றுக்கும் தீர்வாகுமா?

28. கல்வி, வேலை, பதவி உயர்வு என்று அடுத்தடுத்து ஒவ்வொன்றிலும் இட ஒதுக்கீடு வழங்குவது தேவைதானா?

29. கல்வி, வேலை வாய்ப்பு என இட ஒதுக்கீடு வழங்கிக் கொண்டே செல்வது பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்திவிடாதா?

30. ஒடுக்குண்டோருக்குத் தொடக்க நிலையிலிருந்து தரமான சமச்சீர்கல்வி வழங்காமல் அவர்களை உயர் கல்வி நிறுவனங்களுக்குக் கொண்டுவரப்போவதாக அரசியல்வாதிகள் சொல்வது ஏமாற்றல்லவா?

31. பெரும்பாலான தலித் மாணவர்கள் தொடக்கக்கல்வியைக்கூட முடிக்க இயலாமல் படிப்பைப் பாதியில் கைவிட்டுக் கொண்டிருக்க, அவர்களுக்கு ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர் கல்விப் பயிலகங்களில் இட ஒதுக்கீடு வழங்குவதால் என்ன பயன் கிடைத்துவிடப்போகிறது?

32. உலகில் எங்கே சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு உள்ளது? உலகில் எங்குமில்லாத அதிசயமாக இங்கே மட்டும் இது தேவை தானா?

33. உயர் கல்வியிலும் இடஒதுக்கீடு என்றால் தகுதி திறமை என்னாவது?

34. மருத்துவத் துறையிலும் இடஒதுக்கீடு என்பது உயிரோடு விளையாடுவதாகாதா?

35. இட ஒதுக்கீடு மருத்துவம் போன்ற சேவையில் மனித நேயத்தை வளர்க்குமா? எப்படி?

36. சிறப்பான சில துறைகளில் இட ஒதுக்கீடு வழங்கப்படாதது தகுதி திறமை வாதத்தை மெய்ப்பிக்கவில்லையா?

37. உயர் கல்வியில் இட ஒதுக்கீடு என்றால் 30 விழுக்காடு மதிப்பெண் வாங்கியவர்கள் எல்லாம் இந்திய மருத்துவப் பயிலங்களில் நுழைந்து விடமாட்டார்களா?

38. சமூகநீதி திறமை இரண்டும் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ள வழியில்லையா?

39. நடுவணரசின் உயர் கல்விப் பயிலங்களில் நுழைவதற்கு இட ஒதுக்கீடு ஒரு குறுக்கு வழியா?

40. ஐஐடி மாதிரி பெரிய படிப்பு எல்லாம் படிப்பதற்கு இட ஒதுக்கீடு எதற்கு? நல்லாப் படிச்சு வரவேண்டியது தானே என்று கேட்கிறார்களே, இவர்கள் எப்படிக் கல்விக்கூடங்களில் நுழைந்தார்கள் தெரியுமா?

41. இதெல்லாம் பழைய கதை தானே? இன்று அவர்கள் நேர்வழியில் படித்துத்தானே உயர் கல்வி நிறுவனங்களில் இடம் பிடிக்கிறார்கள்?

42. இந்தப் பயிலகங்களில் ஏற்கனவே சட்டப்படி இட ஒதுக்கீடு உரிமை பெற்றுள்ள தலித்துகளின் நிலை என்ன?

43. ஏன்? பிற்பட்ட, தலித் மக்களுக்குக்காகக் குரல் கொடுக்க அங்கு அவர்கள் வகுப்பைச் சேர்ந்த பேராசிரியர்கள் யாரும் இல்லையா?

44. படித்தவர்கள் இட ஒதுக்கீட்டினால்தான் வெளிநாடு சென்றுவிடுகிறார்களா?

45. உயர் கல்வியில் இட ஒதுக்கீடு தருவது உலகளவில் இந்தியாவுக்குள்ள மதிப்பைப் பாதிக்காதா?

46. நடுவணரசின் உயர் கல்விப் பயிலகங்களைக் கல்விக் கோயில்களாக மதித்துப் பாதுகாக்க வேண்டாமா?

47. நடுவணரசின் உயர் கல்விப் பயிலங்களில் சேர்ந்து படிப்பதற்குரிய ஆங்கிலப் புலமையைத் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களால் பெற முடியுமா?

48. பிற்படுத்தப்பட்டோருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் தரமான ஆங்கிலவழிக் கல்வி புகட்டச்சொல்லிப் போராடக்கூடாதா? தமிழில்தான் படிக்க வேண்டும் என்பது தாய்மொழிப் பற்றுக்காகவா?

49. பார்ப்பனர்களின் போராட்டம் தவறானது என்றால் அவர்கள் என்ன செய்வது சரியாக இருக்கும்?

50. சமூகநீதிக்கு எதிரான பாரப்பனிய வலைப்பின்னலை அறுத்து தமிழர்கள் வெல்வது எப்படி?

No comments: