Jan 20, 2015

சென்னை புத்தகக் காட்சி - 2015

இடது புறமாக இருப்பவர் பா.மணிகண்டன், நடுவில் இருப்பவர் ம.பாண்டியராஜன், வலது புறமாக இருப்பவர் இரா.கதிர்வேல்
நீண்ட நாளைக்குப் பிறகு எனது ஆசை நிறைவேறியது. சென்னை புத்தகக் காட்சி - 2015 யில் நான் என்னுடைய நண்பர்களுடன் கலந்து கொண்டேன். 3000 ரூபாய்க்கு புத்தகம் வாங்கியிருக்கிறேன். இந்த வருடத்திற்குள் அவையனைத்தையும் படித்து முடித்து விட வேண்டும்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு எனது நெருங்கிய நண்பர்களான பா.மணிகண்டன், ம.பாண்டியராஜன், அன்பு.பாலசுப்பிரமணியன் ஆகியோர்களை புத்தகக் காட்சி மூலமாக சந்திக்க முடிந்தது. நாங்கள் மூவரும் புத்தகக் காட்சியில் சந்திக்க மிகவும் சிரத்தையோடு ஒருங்கிணைப்பு செய்தது நண்பர் பா.மணிகண்டன். பல்வேறு வேலைகளுக்கு மத்தியிலும் புத்தகக் காட்சியில் கலந்து கொள்ள அழைத்த உடனேயே நண்பர் ம.பாண்டியராஜன் அவர்கள் நிச்சயமாக வருகிறேன் என ஒத்துக்கொண்டார்.

நண்பர்களுக்கு நன்றி!